Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
'சேவாக்கு, டென்டுல்கரு, மகேந்திர டோனி... கபடி ஆடுதப்பா மல்லிகப் பூ மேனி'
கவிஞர் விவேகா வரிகளில் உருவான இந்த பாடலை தேவா பாடியிருப்பதுடன் நடித்தும் இருக்கிறார். அதுமட்டுமல்ல, இசைஞானி இளையராஜா- தேனிசைத்தென்றல் தேவா இருவரது பேத்தியான லய வர்ஷினி இதில் பாடியிருக்கிறார். பிரபல டான்ஸ் மாஸ்டர் 'மைனா' பாபி நடனம் அமைத்திருக்கிறார்.
'சேவாக்கு, டென்டுல்கரு, மகேந்திர டோனி... எல்லாரையும் மறந்துபுட்டு கொஞ்ச நேரம் வா நீ... கபடி ஆடுதப்பா மல்லிகப் பூ மேனி' என்று தனது காந்த குரலில் தேவா பாடுவதை கேட்கிற யாரும் ஆட்டம் போடாமல் இருக்க முடியாது.
ஒரு இசை ஆல்பமாக உருவாகியுள்ள இந்த பாடலில் இசையமைப்பாளர் தேவாவே தோன்றி பாடியிருப்பதுதான் இன்னும் கலகலப்பு. இதற்காக முழுசாக ஒருவாரம் கால்ஷீட் கொடுத்திருந்த தேவா, பிரபல நடன இயக்குனர் பாபி சொல்லிக் கொடுத்த மாதிரி சில மூவ் மென்ட்சுகளையும் செய்துள்ளார்.
சினிமாவில் நடிக்க வந்த பல வாய்ப்புகளை வேண்டாம் என்று மறுத்து வந்த தேவா, இந்த பாடலில் ஆட சம்மதித்தற்கு காரணமே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி மீது அவர் கொண்டிருக்கும் ஆர்வம்தான்.
துடிப்பும் துள்ளலுமாக உருவாகியிருக்கும் இந்த பாடல் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கபடி ரசிகர்கள் முன்னிலையில், பதினாறு மாவட்டங்களை சேர்ந்த கபடி வீராங்கனைகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. ஈரோட்டில் நடந்த இந்த சிறப்பான நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு.கே.வி.ராமலிங்கம் சி.டி யை வெளியிட, இயக்குனர் 'சத்யம்' ராஜசேகர் பெற்றுக் கொண்டார்.
பைரவா கிரியேஷன்ஸ்-ஜெயம் விஷன்ஸ் தயாரிக்க, சிட்டாடல் ஜெய்சங்கர் இயக்கியுள்ளார்.
விழாவில் இசையமைப்பாளர் தேவா பேசியதாவது:
"கிரிக்கெட், டென்னிஸ், வாலிபால் போன்ற எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும் பாடிக் கொண்டே ஆடுகிற ஒரே விளையாட்டு கபடிதான். இது தமிழர்களோட பாரம்பரியமான விளையாட்டு. மூச்சு அடைத்து பாடும்போது நுரையீரலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிற விளையாட்டு இது. இந்த விளையாட்டை பெண்களும் ஆடுகிறார்கள். அதுவும் ஆண்களுக்கு இணையாக என்று நினைக்கும்போது நிஜமாகவே பெருமையாக இருக்கிறது. எத்தனையோ பாடல்களை நான் உருவாக்கியிருந்தாலும் இந்த பாடலை உருவாக்கிய பிறகு என்னையறியாமல் ஒரு மன நிறைவு ஏற்பட்டது. உலக அளவில் கபடிக்காக பிரத்யேகமாக உருவான பாடலும் இதுவாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன்."
துள்ளாட்டம் போட வைக்கும் இந்தப் பாடல் விரைவில் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.