Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இமயத்துடன் இணையும் சிகரம்!
பல சாதனை நடிகர்களை வடித்தெடுத்த கரங்களுக்குச் சொந்தக்காரர்களான பாரதிராஜாவும், கே.பாலச்சந்தரும் இதுவரை இணைந்து எதையும் படைத்ததில்லை. அந்தக் குறையைத் தீர்த்து வைக்கும் காலம் தற்போது கனிந்துள்ளது.
இருவரும் இணைவது கேமராவுக்கு பின்னால் அல்ல, மாறாக முன்னால். அதாவது இருவரும் இணைந்து நடிக்கப் போகிறார்கள். தாமிரா என்ற புதுமுக இயக்குநர்தான், இந்த இரு இமயங்களையும் இயக்கும் பாக்கியம் பெற்றவர்.
தாமிரா, இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம் இது என்றாலும் கூட பாலச்சந்தரால் பட்டை தீட்டப்பட்டவர். அவரிடம் பல காலமாக உதவியாளராக இருந்தவர். வசனகர்த்தாவாக பாலச்சந்தரின் பல படங்களிலும், டிவி தொடர்களிலும் கருத்தாழம் மிக்க வசனங்களை எழுதிய அனுபவம் உடையவர்.
தாமிராவுக்கு, பாலச்சந்தரையும், பாரதிராஜாவையும் இணைத்து ஒரு படம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது. இருவரையும் சந்தித்து கதையையும் கூறினார். கதையைக் கேட்டதுமே இருவரும் சட்டென்று நடிக்க ரெடி என்று கூறி விட்டார்களாம்.
தாமிரா இயக்கப் போகும் இந்தப் புதிய படத்தில் பாரதிராஜாவுக்கும், பாலச்சந்தருக்கும் முக்கியக் கேரக்டர்களைக் கொடுத்துள்ளாராம் தாமிரா. இப்படத்தைத் தயாரிக்க இரு பெரும் தயாரிப்பு நிறுவனங்களை அணுகியுள்ளாராம்.
விரைவில் முறைப்படியான அறிவிப்பும், நாயகன், நாயகி குறித்த இதர விவரங்களையும் தாமிரா வெளியிடவுள்ளார்.