Don't Miss!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- News
மஞ்சள் அலர்ட்.. தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் மழை வெளுக்க போகிறது.. எங்கெல்லாம் தெரியுமா?
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Lifestyle
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எம்.ஜி.ஆரின் பொருள் ஒன்று விஜயகாந்த் கைக்கு வந்த கதை தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமா துறையில் வள்ளல்களாக கருதப்படும் நடிகர்கள் என்றால் அனைவரும் முதலில் எம்ஜிஆர் அவர்களைத்தான் சொல்வார்கள்.
அவருக்குப் பின் கேப்டன் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்தைப் பற்றித்தான் கூறுவார்கள்.
உணவு விஷயத்திலும், தயாரிப்பாளர்களுக்கு சம்பளத்தை விட்டுக் கொடுக்கும் விஷயத்திலும், பிறருக்கு பண உதவி செய்யும் விஷயத்திலும் திரைத்துறையில் அவ்வளவு நபர்களுக்கு உதவி செய்துள்ளாராம் விஜயகாந்த்.
கதை
பிடித்திருந்தும்
பார்த்திபன்
இயக்கத்தில்
நடிக்க
தயங்கிய
விஜயகாந்த்...
காரணம்
சொன்ன
தானு

நடிகர் சங்கம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழி திரைப்பட நடிகர்களின் சங்கமாக தென்னிந்திய சங்கம் 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது அது உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் எம்ஜிஆர். 1952-ல் ஆரம்பிக்கப்பட்ட அந்தச் சங்கத்திற்கு பல தலைவர்கள் வந்து போனாலும் 2000-ம் ஆண்டிலிருந்து 2006-ஆம் ஆண்டு வரை தலைவராக இருந்த விஜயகாந்தின் செயல்பாடுகள் தான் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. காரணம் சங்கத்திற்கு இரண்டு கோடி கடன் இருந்தபோது தலைவராக வந்தவர், தன்னுடைய நிர்வாகத் திறன் மூலம் அந்தக் கடனையும் அடைத்து சங்கத்திற்கு லாபத்தையும் ஈட்டித் தந்தார்.

அரசியல் பயணம்
அதே திறனை தன்னுடைய அரசியல் பயணத்திலும் செலுத்தலாம் என்று 2006ஆம் வருடம் நடந்த தேர்தலில் எம்.எல்.ஏ ஆன பிறகு நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அரசியலிலும் வந்த உடனேயே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த். அதன் பின் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். பின்னர் உடல் நலக்குறைவால் காலப்போக்கில் அவருடைய அரசியல் செயல்பாடுகள் குறைய தொடங்கின.

எம்.ஜி.ஆர் வாகனம்
எம்ஜிஆருக்கு பல சொத்துக்கள் இருந்தது. தனிப்பட்ட சொத்துக்களை தாண்டி ஆட்சிப் பொறுப்பில் இருந்த மிகப்பெரிய கட்சியும் இருந்தது. கட்சிக்கு தலைமை ஏற்பதில் அவருடைய மனைவி ஜானகி அம்மையாருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கும் ஆரம்ப காலகட்டத்தில் போட்டியிருந்து. பின்னர் கட்சியை கைப்பற்றினார் ஜெயலலிதா. அதேபோல அவருடைய தனிப்பட்ட சொத்துக்களை அவரிடம் வேலை பார்த்த பலருக்கு அவர் எழுது கொடுத்ததாகவும் கூறப்படும். இந்நிலையில் அவர் தனது பிரச்சாரத்திற்காக வைத்திருந்த வாகனம் இப்போது விஜயகாந்திடம் இருக்கிறது.

ஜானகி அம்மா தந்த கார்
எம்ஜிஆர் பயன்படுத்திய வாகனத்தை 1994-ஆம் ஆண்டு விஜயகாந்திற்கு கொடுத்துள்ளார் ஜானகி அம்மையார். அப்போது எம்.ஜி.ஆரிடம் நேரடியாக பணிபுரிந்த பல பேர் பதவியில் இருந்தாலும் ஆட்சியில் இருந்தாலும் அந்த வாகனம் தன்னிடம் தான் வந்தது என்று விஜயகாந்த் பெருமையாக கூறியுள்ளார். 94-லிருந்து 2005-ஆம் ஆண்டு வரை அந்த வாகனத்தை பயன்படுத்தவே இல்லையாம். 2005 என்ற எண்ணை கொண்ட அந்த காரை 2005-ல் தன்னுடைய முதல் அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதுதான் என் தலையில் எழுதியுள்ளது என்று விஜயகாந்த் தன்னுடைய அரசியல் மேடை ஒன்றில் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.