Don't Miss!
- News இலங்கையில் ரூ7,500 கோடி மதிப்பிலான 802 கிலோ எடை ரத்தினக் கல்- உலகிலேயே மிகப் பெரியது!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
புதிய பாடகர்கள் திறமைசாலிகள் - பி சுசீலா பாராட்டு
சேலத்தில் பள்ளி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சுசீலா கூறுகையில், "இன்றைக்கும் எனது குரல் நன்றாக இருப்பதாக பாராட்டுகிறார்கள். அது இறைவன் கொடுத்த வரம் என்றுதான் கூறமுடியும்.
இப்போது உள்ள பாடகர்கள் எங்களை விட திறமைசாலிகள். நன்றாக பாடுகிறார்கள். பாடல்களும் நன்றாக இருக்கின்றன.
இங்கு நடனம் ஆடியவர்களை பார்த்து வியந்து போனேன். அவ்வளவு திறமைகளிடம் உள்ளன. இதைப் பார்க்க கொடுத்து வைத்திருக்கவேண்டும். இதுபோல் அனைத்து குழந்தைகளிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும். இதை வெளிக்கொண்டு வர வேண்டும். மாணவ, மாணவிகளை ஊக்குவிப்பதில் பெரும் பங்கு பெற்றோருக்கு உண்டு. மாணவ, மாணவிகள் செய்ய விரும்புவதை பெற்றோர்கள் அனுமதிக்கிறார்கள்.
இதனால் மாணவ, மாணவிகள் பெற்றோர் விரும்புவதை நிறைவேற்றி வைக்க வேண்டும்," என்றார்.
எவ்வளவோ பாடல்களை பாடி உள்ளீர்கள். உங்களால் மறக்க முடியாத அனுபவம் உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டபோது, "நிறைய இருக்கிறது. இதை உங்கள் முன் பகிர்ந்து கொள்ள இயலாததற்கு வருந்துகிறேன்," என்றார்.
பிறகு அவர் உன்னை காணாத, ஆலய மணி போன்ற பாடல்களை பாடினார்.