Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
புதிய பாடகர்கள் திறமைசாலிகள் - பி சுசீலா பாராட்டு
சேலத்தில் பள்ளி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சுசீலா கூறுகையில், "இன்றைக்கும் எனது குரல் நன்றாக இருப்பதாக பாராட்டுகிறார்கள். அது இறைவன் கொடுத்த வரம் என்றுதான் கூறமுடியும்.
இப்போது உள்ள பாடகர்கள் எங்களை விட திறமைசாலிகள். நன்றாக பாடுகிறார்கள். பாடல்களும் நன்றாக இருக்கின்றன.
இங்கு நடனம் ஆடியவர்களை பார்த்து வியந்து போனேன். அவ்வளவு திறமைகளிடம் உள்ளன. இதைப் பார்க்க கொடுத்து வைத்திருக்கவேண்டும். இதுபோல் அனைத்து குழந்தைகளிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும். இதை வெளிக்கொண்டு வர வேண்டும். மாணவ, மாணவிகளை ஊக்குவிப்பதில் பெரும் பங்கு பெற்றோருக்கு உண்டு. மாணவ, மாணவிகள் செய்ய விரும்புவதை பெற்றோர்கள் அனுமதிக்கிறார்கள்.
இதனால் மாணவ, மாணவிகள் பெற்றோர் விரும்புவதை நிறைவேற்றி வைக்க வேண்டும்," என்றார்.
எவ்வளவோ பாடல்களை பாடி உள்ளீர்கள். உங்களால் மறக்க முடியாத அனுபவம் உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டபோது, "நிறைய இருக்கிறது. இதை உங்கள் முன் பகிர்ந்து கொள்ள இயலாததற்கு வருந்துகிறேன்," என்றார்.
பிறகு அவர் உன்னை காணாத, ஆலய மணி போன்ற பாடல்களை பாடினார்.