Don't Miss!
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
கோடி ரூபா கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்!- கின்னஸ் சாதனை பி சுசீலா
கோடி ரூபா கொடுத்தாலும் நான் நடிக்க மட்டும் வரமாட்டேன் என்று கின்னஸ் சாதனைப் படைத்த பாடகி பி சுசீலா கூறினார்.
பிரபல பின்னணிப் பாடகி பி. சுசீலா 17,695 பாடல்கள் பாடியுள்ளார். இசையுலகில் மிகப் பெரிய சாதனையாக இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சாதனையையொட்டி நேற்று சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பி சுசீலா கூறியதாவது:
"இந்தத் தருணம் எனக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
முதல் தேசிய விருது எம்.எஸ்.வி இசையில் வெளியான 'நாளை இந்த வேளை பார்த்து' பாட்டுக்குக் கிடைத்தது. பாடல் கம்போஸிங்கின் போதே இந்தப் பாட்டுக்கு உனக்கு விருது கிடைக்கும்னு எம்.எஸ்.வி சொன்னார். அதேபோல கிடைத்தது. எம்.எஸ்.வி இசையமைப்பில் பாடி தேசிய விருது பெற்றது பெரிய மகிழ்ச்சி.
இயக்குநர் கோபாலகிருஷ்ணன் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். அதன் பிறகும் நிறையப் பேர் அழைக்கிறார்கள். கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். எனக்கு எப்போதுமே நடிப்பில் பிரியம் இருந்ததில்லை.
இசைக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி. நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்போதும் பாடத் தயாராகவே இருக்கிறேன்," என்றார் அவர்.