Don't Miss!
- News சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில் வேகம் எடுக்கும் அதிமுக!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பத்மாவும் காமெடி நடிகரும்!
நடிகை பத்மா நாராயணன் விரித்த வலையில் சிக்கியவர்களில் பல நடிகர்களும் இருக்கிறார்களாம்.
பத்மா புராணம் நீண்டு கொண்டே இருக்கிறது. தினசரி ஒரு புதுச் செய்தி, தினசரி ஒரு புது திருப்பம் என போய்க் கொண்டிருக்கும் பத்மாவின் கதை, நாளுக்கு நாள் புதுப் புது மேட்டர்களை கொட்டிக் கொண்டேயிருக்கிறது.வீராசாமி அவர் நடித்த முதல் படம். இருந்தாலும் அதுதான் அவரது முதல் சினிமாத் தொடர்பு கிடையாது. அதற்கு முன்பே ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் பத்மா.
ஆனால் வாய்ப்பளித்தது விஜய டி.ராஜேந்தர் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் பத்மாவை வேறு விதங்களில் மட்டும் பயன்படுத்திக் கொண்டு திராட்டில் விட்டுள்ளனர்.
பத்மாவுக்கு பல நடிகர்களுடன் தொடர்பு உள்ளதாம். இதில் முக்கியமான காமெடி நடிகர் ஒருவர் மட்டும்தான் பிரதானமாக அடிபடுகிறார். ஆனால் இளம் நாயகன் ஒருவரும் பத்மாவிடம் படு பாசமாக இருந்துள்ளார். இந்த நடிகர் குறித்து கோலிவுட்டில் கதை, கதையாக சொல்கிறார்கள்.
தன்னுடன் உல்லாசமாக, சல்லாபமாக இருந்தவர்களை குண்டக்க மண்டக்க கோலத்தில் புகைப்படம், வீடியோ எடுத்து வைத்துள்ள பத்மா இந்த நடிகர்களையும் விடவில்லை. அவர்களது அலங்கோல படங்களும் இவரிடம் உள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, பல தொழிலதிபர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பத்மா, ஆடம்பர குரூயிஸ் கப்பல்களிலும் பயணித்து உல்லாச பயணம் மேற்கொண்டுள்ளார்.
பத்மாவின் இந்தக் கப்பல் பயணத்திற்கு சில ஏஜென்டுகள் ஏற்பாடு செய்து தந்துள்ளனர். இதில் அவர்களுக்கும் செமத்தியான காசாம். ஆனால் அவர்களில் சிலர் பத்மாவுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர்.
ஆனால் பத்மாவோ புழல் சிறையில் வேறு விதமாக புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.
பிறந்த நாள் விருந்துக்கு வான்னு கூப்பிட்டான் பிரதீப். ஆனால் குரூப் செக்ஸ் வச்சுக்கத்தான் கூப்பிட்டான்னு அப்புறம்தானே தெரிந்தது. அதற்கு சம்மதிக்காததால் இப்படி மாட்டி விட்டுட்டானே என்று பிரதீப்பை, திட்டியபடி உள்ளார் பத்மா.
இதற்கிடையே பத்மாவை எப்படியாவது ஜாமீனில் எடுத்து விட பெற்றோர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.