Don't Miss!
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Automobiles ரேஸ் டிராக்கை தெறிக்கவிட்ட பைக் ரேஸர்கள்!!
- Finance ஸ்மால்கேப் முதலீட்டாளர்கள் காட்டில் மழை.. மொத்தம் 26 லட்சம் கோடி லாபமாம்..!!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ரஜினி நலமடைந்ததால் திருமலையில் சாமி தரிசனம் செய்த சௌந்தர்யா அஸ்வின்!
ஆனால் நடிகர் மோகன் பாபு தலையிட்டதால், உடனடியாக அவரை அனுமதித்தனர் கோயில் நிர்வாகத்தினர்.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலமடைந்ததால், அவரது மகள் சௌந்தர்யா தனது கணவர் அஸ்வினுடன் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார்.
நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் சௌந்தர்யா, மருமகன் அஸ்வின் ஆகியோரது பெயர்களில் தெலுங்கு நடிகர் மோகன்பாபு மூலம் வி.வி.ஐ.பி. தரிசனத்துக்கு முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருந்தது.
எனவே, ரஜினிகாந்த் திருமலைக்கு வருவார் என்ற எதிர்பார்ப்புடன் அவரது ரசிகர்கள் நேற்று அதிகாலையிலேயே மலையில் குவிந்துவிட்டனர். ஆனால், ரஜினிகாந்த் வரவில்லை. சௌந்தர்யா, அஸ்வின் ஆகியோர் மட்டுமே நேற்று காலையில் வைகுண்டம் கியூ காம்பளக்ஸ் வந்தனர். அதற்குள் வி.வி.ஐ.பி.க் கள் தரிசன நேரம் முடிந்து விட்டதால், இருவரும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதனால், அரைமணி நேரம் கோயில் வெளிப்பகுதியில் இருவரும் காத்திருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த நடிகர் மோகன்பாபு, தேவஸ்தான உயரதிகாரிகளுக்கு போனில் பேசினார். பின்னர் சௌந்தர்யாவும், அஸ்வினும் விஐபி டிக்கெட் மூலம் தரிசனம் செய்தனர்.
சாமி தரிசனம் முடித்து வெளியே வந்த சவுந்தர்யா நிருபர்களிடம் கூறுகையில், "எனது தந்தையின் உடல்நிலை குணமடைந்ததும் ஏழுமலையானை தரிசிக்க பிரார்த்தனை செய்திருந்தோம். அதன்படி தரிசிக்க வந்தோம்", என்றார்.
ஆகஸ்ட் 14-ம் தேதி திருமலைக்கு வரும் ரஜினி
மேலும் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி ரஜினி திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யவிருப்பதாகவும் சௌந்தர்யா தெரிவித்தார்.
ரஜினி மகள்-மருமகனுக்கு திருப்பதி நகர ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். அவர்களுக்கு ஏழுமலையான் படங்களை பரிசாக வழங்கினார்.