கையைக் 'கடி'க்கும் நயன்-முக்கி, முணங்கும் பிரபுதேவா!
பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணத்தை முன்னிட்டு நயன்தாரா நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டார். ஆனால் அம்மணி தாறுமாறாக செலவு செய்கிறாராம். இதனால் பிரபுதேவா செய்வதறியாது தவிக்கிறார் என்று கூறப்படுகிறது. நான் சம்பாதிப்பது எல்லாம் இந்த 'ஆத்தா' செலவுக்கே போய்விடும் போலிருக்கு என்று புலம்புகிறாராம்.
இதற்கிடையே, பெரும் பணப்பிரச்சனையில் சிக்கித் தவித்த நயன்தாராவுக்கு உரிய நேரத்தில் பணம் கொடுத்து பிரபுதேவா உதவியதை ஒரு முன்னணி செய்தித் தாள் கண்டுபிடித்துள்ளது. நயன்தாரா தான் வைத்திருக்கும் 4 ஸ்டைலான கார்களுக்கான இன்ஸ்டால்மென்ட் கட்டவில்லை. அப்போது பிரபுதேவா தான் ரூ.10 லட்சம் கொடுத்து நயனைக் காப்பாற்றியுள்ளார்.
இப்படி ஓவரா செலவு செய்தால் தாங்காது, கொஞ்சம் அடக்கி வாசி என்று பிரபுதேவா சொன்னதை நயன்தாரா காதில் வாங்கிக் கொள்ளவேயில்லையாம். தனது கடனை கட்டிவிட்டு பிறகு வீட்டிற்குள் வந்தால் போதும் என்று நயன் கூறியதாக கிசுகிசுக்கப்படுகிறது.
அவர்கள் திருமணம் செய்துகொள்ளவிருந்தாலும், இன்னும் தேதி முடிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












