இல்ல இல்ல... செப்டம்பர் மாசம்தான்! - நயன், பிரபுதேவா அறிவிப்பு

தங்களுக்கு செப்டம்பர் மாதம்தான் திருமணம் நடக்க உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபுதேவா இயக்கிய செய்த வில்லு படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்தார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இரண்டு பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுதொடர்பாக குடும்பநல கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் சமாதானமடைந்து விவாகரத்துக்கு ரமலத் சம்மதித்தார். அதைத் தொடர்ந்து 2 பேருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
பிரபுதேவாவை திருமணம் செய்வதற்கு வசதியாக நயன்தாரா கிறிஸ்தவ மதத்தில் இருந்து மாறி இந்து மதத்தை தழுவினார்.
இதைத் தொடர்ந்து இருவருக்கும் சில தினங்களுக்கு முன் மும்பையில் திருமணம் நடந்ததாக தகவல் வெளியானது. இதை நயன்தார்-பிரபுதேவா இருவருமே மறுத்துவிட்டனர்.
செப்டம்பரில் தங்கள் திருமணம் நடக்கும் என்றும், இந்தத் திருமணம் மும்பை அல்லது ஹஐதராபாத்தில் விமரிசையாக நடைபெறும் என்றும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











