Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பத்திரிகையாளர்களை பார்த்து விமான நிலையத்தில் ஓட்டம் பிடித்த பிரபுதேவா- நயன்!
நடிகை நயன்தாராவுக்கும், நடிகர் பிரபுதேவாவுக்கும் இடையிலான காதல் எல்லோருக்கும் தெரிந்த சமாச்சாரம். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவியாக இருந்து வருகிறார்கள்.
ஆனாலும் தொடர்ந்து மெளனம் சாதிப்பதன் மூலம் முடிந்தவரை மீடியாவின் பரபரப்பு வெளிச்சத்தில் இருந்து வருகிறார்கள்.
இந்தக் காதலுக்கு, பிரபுதேவாவின் மனைவி ரமலத் ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நயன்தாராவை எங்கே பார்த்தாலும் அடிப்பேன் என்றார். ஆனால், அவருடைய கோபம் இப்போது அடங்கி விட்டது. அவரை, பிரபுதேவா சமாதானப்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.
மனைவி ரமலத் சமாதானம் ஆனபிறகுதான் பிரபுதேவாவும், நயன்தாராவும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டார்களாம் (இருந்தாலும் நயன்தாராவை பிரபுதேவாவுடன் பார்த்த ஆத்திரத்தில் மீண்டும் உதைப்பேன் என்று சவுண்ட் விட்டார் ரம்லத்!).
இந் நிலையில் நயன்தாரா, ஒரு கன்னட படத்தில் நடிப்பதற்கு சம்மதித்து இருக்கிறார். இதற்கான போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி, பெங்களூரில் நடந்தது.
அதில் கலந்து கொள்வதற்கு நயன்தாரா, பிரபுதேவாவையும் உடன் அழைத்து சென்றார். கன்னட படத்துக்காக போட்டோ செஷன் முடிந்து, இருவரும் விமானம் மூலம் சென்னை திரும்பினார்கள்.
ஓட்டம்...
விமானத்தில் இருந்து நயன்தாராவும், பிரபுதேவாவும் கைகோர்த்தபடி இறங்கி வந்தார்கள்.
விமான நிலையத்துக்கு வெளியே பத்திரிகை நிருபர்களும், போட்டோகிராபர்களும் கேரளாவில் இருந்து வரும் நடிகர் ஜெயராம் பேட்டிக்காகக் காத்திருந்தார்கள். இதை கவனித்த ஒரு பாதுகாப்பு அதிகாரி, பிரபுதேவா காதில் போய் கிசுகிசுத்தார்.
அவ்வளவுதான். பிரபுதேவாவின் முகம் வியர்த்துவிட்டது. நயன்தாராவின் கையை உதறினார். எங்கே ஓடி ஒளியலாம்? என்று அந்த பாதுகாப்பு அதிகாரியிடமே கேட்டார். அவர் கொடுத்த ஐடியாவின்படி, நயன்தாராவை அழைத்துக்கொண்டு உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான நிலையத்துக்கு ஓடினார்கள்.
அங்கிருந்து, பத்திரிகையாளர்கள் கண்களில் படாமல் இருவரும் தப்பி ஓடினார்கள். அப்படி ஓடியதையும் விடவில்லை பத்திரிகை புகைப்படக்காரர்கள் என்பது பிரபு தேவா-நயன்தாராவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை!