Don't Miss!
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அரசியலுக்கு வருகிறார் நடிகர் பிரபு !
நடிகர் சிவாஜியை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் வேலூர் நேஷனல் பிக்சர்ஸ் உரிமையாளர் பெருமாள்.
அவருக்கு மரியாதை செய்யும் விதமாக ஆண்டுதோறும் பொங்கல் நாளில் நடிகர் சிவாஜியும், அவரது மனைவி கமலாவும் பெருமாள் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கும் புத்தாடை, மற்றும் பழங்கள் கொடுப்பது வழக்கம்.
சிவாஜி மறைவுக்கு பிறகு அவரது மகன் ராம்குமார், நடிகர் பிரபு ஆகியோர் சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த பொங்கல் நாளில் பெருமாள் வீட்டிற்கு வருகை தந்த ராம்குமார், பெருமாள் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்பு அவரது குடும்பத்தினரிடம் புத்தாடைகள், பழங்களை கொடுத்து மகிழ்ந்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சந்திரமுகிக்குப் பின் சிவாஜி புரடக்க்ஷன் சார்பில் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழியில் இரண்டு படங்கள் தயாரிக்கிறோம்.
இதில் கன்னடத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். இப் படத்தை இயக்குனர் பி. வாசு இயக்குகிறார்.
தமிழில் அஜீத் ஹீரோவாக நடிக்கவுள்ளார். படத்திற்கு டைரக்டர் இன்னும் முடிவு செய்யவில்லை. இதன் படப்பிடிப்பு தீபாவளிக்கு தொடங்கி 2009 ஏப்ரல் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாகும்.
நடிகர் பிரபு அரசியலுக்கு வருவார். எப்போது எனத் தெரியாது. ஆனால் நான் உள்பட பலரும் அதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றார்.
சில மாதங்களுக்கு முன்பும் ராம்குமார் இப்படிக் கூறியது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் ஜெயித்தாலும் அரசியலில் சிவாஜிக்கு தோல்வி தான் கிடைத்தது. பிரபுவுக்கு எப்படியோ