twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாமாவுக்கு உதவிய கலை குடும்பம்!

    By Staff
    |

    கலைக்குடும்பத் தலைவரான விஜய நடிகர்தான் தனக்கு பல நடிகைகளை அறிமுகப்படுத்தி வைத்து, தொழிலுக்கு பேருதவியாக இருந்தார் என்று கன்னட பிரசாத் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    மாமா பிரசாத்தின் லீலா வினோதங்கள் திகைக்க வைக்கும் அளவுக்கு தினசரி ஒரு கதையாக வெளியாகி திரில்லைக் கூட்டி வருகின்றன. அவர் புதிதாக போட்டுள்ள ஒரு குண்டு, கலைக்குடும்பநடிகர்தான் தனக்கு பல முன்னணி நடிகைகளை அறிமுகப்படுத்தி பேருதவியாக இருந்தார் என்பதுதான்.

    ஏற்கனவே பிரசாத் போட்டுள்ள குண்டுகளால், பல முன்னணி நடிகைகள் முகத்தைக் காப்பாற்ற பெரும் முயற்சிகளில் குதித்துள்ளனர். இந்த நிலையில், விஜய நடிகர் பெயரை பிரசாத் உதிர்த்திருப்பதுகோலிவுட்டை பெரும் திகிலில்ஆழ்த்தியுள்ளது.

    அம்பி முதல் மீதா வரை...!

    பிரசாத்தின் புரோக்கர் பூர்வீகம் அம்பி-ரா சகோதரி நடிகைகளிலிருந்து ஆரம்பிக்கிறதாம். 80களில் படு பிசியாக இருந்தவர் அம்பி நடிகை. கமல், ரஜினியுடன் மாறி மாறி ஜோடி போட்டசாதனைக்குரியவர். அம்பி நடிகையை, விஜய நடிகர்தான் பிரசாத்துக்கு அறிமுகப்படுத்தினாராம்.

    அறிமுகமான அம்பி நடிகையை, ஒரு தயாரிப்பாளருக்கு தாரை வார்த்துக் கொடுத்துள்ளார் பிரசாத். அதன் பின்னர் அம்பியின் தங்கச்சி ரா நடிகையையும் பிரசாத் சந்தித்துள்ளார். பிறகு அவரும் பிரசாத்தின்பட்டியலில் இணைந்துள்ளார்.

    இவர்கள் இருவரையும் வைத்து பிரசாத் பிரமாதமாக தொழில் நடத்தி பணத்தை வாரியுள்ளாராம். அவர்களை வைத்து அரசியல்ரீதியாகவும் பல காரியங்களை சாதித்துள்ளார் பிரசாத். ஒரு கட்டத்தில்,யாரெல்லாம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்தார்களோ, அவர்கள் எல்லாம் பிரசாத்தின் கஸ்டமர்களாக இருந்துள்ளனர்.

    இவர்கள் தவிர பல புதுமுகங்களையும் தனது குல்மா உலகத்தில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். மீதா, நட்பு நடிகை, உலக அழகியின் பெயரை பின்னால் கொண்ட லட்சுமிமயமான நடிகை, விரைவில்கல்யாணமாகவுள்ள கன்னட நடிகை ஷிதா, ஸ்வா நடிகை, கும் நடிகை என இந்தப் பட்டியலும் படு கும்மாக உள்ளது.

    சரி, மீண்டும் கலைக்குடும்பத்துக்கு வருவோம். பிரசாத் தனது டீலிங் மற்றும் லீலைகளுக்கு கலைக்குடும்பத்துத் தலைவரின் வீட்டைத்தான் அதிகம் பயன்படுத்தியுள்ளாராம்.

    கலைக்குடும்பத்தின் முதல் வாரிசைத் தவிர மற்ற அனைவருக்கும் பிரசாத்துடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறதாம்.

    கலைக்குடும்பத்தின் வீட்டில் வார இறுதி நாட்களில் நடக்கும் டங்கணக்கடி பார்ட்டி கோலிவுட்டில் படு பிரபலம். பெரிய பெரிய நடிகர்கள், நடிகைகள் கூட்டமாக கூடி கும்மாளமாகஅமர்க்களப்படுத்துவார்களாம். என்ன மாதிரியான அமர்க்களம் என்பதையெல்லாம் விளக்க வேண்டியதில்லை!

    இந்த கும்மாளக் குட்டையில் பிரசாத்தும் அடிக்கடி வந்து நீந்திச் செல்வாராம். வரும்போது வெறும் கையோடு வராமல் புதுப் புதுக் கோழிகளையும் பிடித்துக் கொண்டு விருந்து வைப்பாராம்.

    அதிகாரிகளுக்கு விருந்தான மனைவி:

    கன்னட பிரசாத் தனது 3வது மனைவியின் 24வது பிறந்த நாளன்று அவரை உயர் அதிகாரிகளுக்கு விருந்தளித்தாகவும் கூறியுள்ளார்.

    இதுகுறித்து போலீசிஸ் விசாரணையின்போது பிரசாத் கூறுகையில், எனக்கு நிறைய அரசியல்வாதிகளுடன், போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்புள்ளது. அவர்களின் ஆதரவால் தான் என்னை போலீஸார்இத்தனை ஆண்டுகளாக பிடிக்காமல் இருந்தனர்.

    இதற்காக கடந்த 4 ஆண்டுகளாக விபசார தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு மாதம் 2 லட்சம் வரை லஞ்சம் கொடுத்துள்ளேன். சில சமயம் மாடல் அழகிகளையும், துணை நடிகைகளையும் அவர்களுக்குவிருந்தாக்குவேன்.

    வாரம் ஒரு முறை ....!

    விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அவ்வப்போது நான் சொல்லும் இடத்திற்கு வந்து அழகிகளோடு உல்லாசம் அனுபவிப்பார்கள்.

    இதில் கடவுள் பெயர் கொண்ட அதிகாரி ஒருவர் என்னிடம் அடிக்கடி நடிகைகளை அனுபவிக்க வேண்டும் என கூறுவார். இதற்காக நான் அவருக்கு பல முறை நடிகைகளை அனுப்பி வைத்துள்ளேன்.

    இதனால் அவருடன் எனக்கு நெருங்கிய நண்பராக மாறிவிட்டார். இதனால் என்னுடைய அழகிகள் 4 பேரை அவருக்கு சொந்தமான போரூர் வீட்டுக்கு வாரம் ஒருமுறை சென்று வருவார்கள்.

    ஒருமுறை ப்ரண்ட்ஸ் நடிகை அங்குள்ள போலீசில் மாட்டிக்கொண்டார்.

    அதுபோல புதுவையில் உள்ள முக்கிய அரசியல் கட்சியில், பொறுப்பில் உள்ள 4 எழுத்து பிரமுகர் ஒருவர்அழகிகளை வைத்து ஹோட்டகளில் கிளு கிளு நடனம் நடத்தி வந்தார். அதற்குத் தேவையான பெண்களைநான் தான் போதிய அளவுக்கு அனுப்பி வைப்பேன். இதன் மூலம் புதுவையிலும் தொழிலை டெவலப் செய்யமுடிந்தது.

    சமீபத்தில் எனது 3வது மனைவி குஷூம்மின் 24வது பிறந்த நாளை மது விருந்துடன் பிரமாண்டமானகொண்டாடினேன். இதில் எனக்கு கிழே செயல்படும் புரோக்கர்கள் நெருக்கமான போலீஸ் மற்றும் அரசுஅதிகாரிகள் வந்திருந்தனர்.

    கேக் ஊட்டி, முத்தம்!

    அவர்களில் முக்கியமான போலீஸ் அதிகாரி ஒருவர்தான் எனது மனைவிக்கு கேக் வெட்டி முதலில்ஊட்டிவிட்டார். பின்னர் எனது மனைவியை கட்டிபிடித்து முத்தமிட்டார். பின்னர் என்னிடம் வந்து அதுநெசமாவே உன் மனைவிதானா என்று கேட்டார். அவரின் ஆசையை புரிந்து கொண்டு, அது என்னுடையகேர்ள் பிரண்ட், மற்றவர்களுக்காக என் மனைவி என்று கூறியுள்ளேன் என்றேன்.

    பின்னர் பிறந்தநாள் விழா முடிந்த பின் குஷூமுடன் அவர் கும்மாளமாக இருந்தார். அதன் பின்னர் அவர்மாதத்திற்கு 2 முறை குஷுமை தேடிவந்து விடுவார். என்னை விட என்னை இந்த தொழிலை செய்யதூண்டியவர்கள் போலீஸ் அதிகாரிகள் தான் என்று கொட்டியுள்ளார் மாமா பிரசாத்.

    பிரசாத்துக்கு ஷில்பா, விமலா, லதா, குஷும் உள்பட 7 மனைவிகள் இருந்தாலும், தொழிலுக்கு மிகவும்உதவியாக இருந்தது ஷில்பாவும குஷுமும் தான். ஷில்பாவுக்கு முக்கிய வேலை பெரிய நடிகைகளையும் பணமுதலைகளையும் நேரடியாக டீல் செய்வது தானாம்.

    ஷ்..., அப்பா, இப்பவே கண்ணைக் கட்டுதே!

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X