Don't Miss!
- News பம்பரம் இல்லை! துரை வைகோ போட்டியிடுவது தீப்பெட்டியா? கேஸ் சிலிண்டர் சின்னமா?
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Automobiles மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
மார்வாடி-ப்ரீத்தி டும் டும்?
சென்னையைச் சேர்ந்த மார்வாடி வாலிபருக்கும், ப்ரீத்தி வர்மாவுக்கும் கல்யாணம் ஆகி விட்டதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.
கவர்ச்சி வேடங்களில் நடித்து வரும் ப்ரீத்தி வர்மா, ஆந்திராவுக்கு ஷூட்டிங் சென்ற போது காணாமல் போய் விட்டார். நடிகை விந்தியாவின்முன்னாள் மேனேஜர் அருண்தான், ப்ரீத்தியை கடத்தி விட்டதாக முதலில் புகார் எழுந்தது.ஆனால் போலீஸ் விசாரணையில் அருணுக்கு சம்பந்தம் இல்லை என்று தெரிய வந்தது. பின்னர் ப்ரீத்தியின் காதலர் விஜய் கடத்தியிருக்க வேண்டும்என கூறப்பட்டது. ஆனால் விஜய்க்கும் இதில் தொடர்பு இல்லை என்று தெரிய வந்தது.
இந் நிலையில், மகேந்திரன் என்ற மார்வாடி வாலிபர்தான் ப்ரீத்தியைக் கடத்தியுள்ளார் என்று ப்ரீத்தியின் தாயும், தந்தையும் கூறினர்.மகேந்திரனைப் பிடித்தால் ப்ரீத்தியும் கிடைத்து விடுவார் என்று கூறினார்கள்.
மகேந்திரன் சென்னை செளகார்பேட்டையைச் சேர்ந்தவர். ப்ரீத்தி குடும்பத்துடன் நெருங்கிப் பழகி வந்தாராம். ப்ரீத்தியின் பெற்றோரை அம்மா,அப்பாவை என்றுதான் பாசமாக கூப்பிடுவாராம். ப்ரீத்திக்கு ராக்கிக் கயிறு கூட கட்டினாராம்.
இந்த நிலையில் தங்களது நம்பிக்கையை சிதைத்து விட்டு ப்ரீத்தியை கடத்திச் சென்று விட்டார் மகேந்திரன் என்று போலீஸில் கொடுத்துள்ளபுகாரில், ப்ரீத்தியின் பெற்றோர் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, மகேந்திரன், ப்ரீத்தியை மணந்து கொண்டு விட்டதாக புதுத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த்த தகவலை ப்ரீத்தியின்பெற்றோரும் போலீஸில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ப்ரீத்தியை தேடும் பணியை போலீஸார் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர்.