மட்டக்களப்பில் ஒருவாரத்துக்குப் பிறகு வெளியானது ராவணன்!

By Chakra

கொழும்பு: திட்டமிட்டபடி மட்டகளப்பின் அனைத்துத் திரையரங்குகளிலும் மணிரத்னத்தின் ராவண் மற்றும் ராவணன் படங்கள் இன்று திரையிடப்பட்டன.

மட்டகளப்பு நகரில் சாந்தி திரையரங்கில் ராவணன் படம் திரையிடத் திட்டமிட்டிருந்தது. ஆனால் அடையாளம் தெரியாத ஒரு கும்பல், இலங்கை திரைப்பட விழாவுக்கு வராமல் புறக்கணித்த நடிகர்கள் நடித்த இந்தப் படத்தை மட்டக்களப்பில் எங்கும் திரையிடக் கூடாது என்று கூறி கடந்த வியாழனன்று தீ வைத்தது.

இதனால் மட்டக்களப்பில் ராவணன் வெளியாகவில்லை. இந்த விஷயத்தில் தலையிட்ட இலங்கையின் தேசிய திரைப்பட கழகம், திட்டமிட்டபடி மட்டக்களப்பில் ராவண் மற்றும் ராவணன் திரைப்படங்களை வெளியிடச் சொன்னது. இதைத் தொடர்ந்து இன்று இந்தப் படங்கள் வெளியாகின.

ராவண், ராவணன் படங்கள் வெளியாகியுள்ள அனைத்துத் திரையரங்குகளுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க திரைப்பட கழகம் போலீசை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், சாந்தி திரையரங்கைக் கொளுத்திய சிங்கள கும்பல் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் திரைப்பட கழகம் அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X