Don't Miss!
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- News ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஸ்பெஷல்ஸ்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகப் பிரபலமான அண்ணாமலை மெகா தொடரை இயக்கி வந்த இயக்குனர்சி.ஜே. பாஸ்கரை திடீரென்று நீக்கியுள்ளார் தொரிடன் தயாப்பாளரான நடிகை ராதிகா.
திரைப்படங்களில் நடித்து முடித்து ஓய்ந்த நிலையில் சன் டிவி பக்கம் ஒதுங்கினார் நடிகை ராதிகா. தனது மகள்ரேடானின் பெயரில் ரோடன் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கிய ராதிகா, அந்த நிறுவனம் சார்பில்சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரை கொடுத்தார்.
அதன் பிறகு சித்தி என்ற மெகா ஹிட் தொடரை தயாத்தார். தமிழகத்தில் மட்டுமல்லாது, கடல் கடந்து பல்வேறுநாடுகளிலும் உள்ள தமிழர்களை கவர்ந்தது சித்தி. அந்தத் தொடைர இயக்கிய சி.ஜே. பாஸ்கரும் பெயர் பெற்றார்.
சித்தியில் கிடைத்த பெயரை முதலீடாக வைத்து சூட்டோடு சூடாக அண்ணாமலை என்ற தொடரை தயாரித்தார்ராதிகா. இந்தத் தொடர் தற்போது 500 நாட்களைக் கடந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
சித்தி போல தெளிவான கதையாக இல்லாமல் ஆரம்பத்திலிருந்தே படு குழப்பமான திரைக் கதையுடன்ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது அண்ணாமலை. சூனியம், மந்திரம், முந்தைய ஜென்மம் என ஆரம்ப காலத்தில்மக்களைக் குழப்பிக் கொண்டிருந்த அண்ணாமலையில் தற்போது ஆபாசம், அறுவெறுப்பும் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.
அண்ணனைக் காதலித்த பெண், அவன் கைவிட்டதால் தம்பியை மணந்து கொண்டு ஒரே வீட்டில் இருந்து கொண்டுஅண்ணனை டீஸ் செய்வது, பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான வசனங்கள் என தொடர்ந்து பெண்களைமுகம் சுழிக்க வைத்துக் கொண்டிருக்கிறது அண்ணாமலை.
இந் நிலையில் இயக்குனர் பாஸ்கரை தங்களது நிறுவனத்திலிருந்து நீக்கி விட்டதாக ராதிகா அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கே போகும் ரயில் படத்திலிருந்து இப்போது வரைஎன்னை ஆதரித்து வந்துள்ள ரசிகர்களுக்கு நன்றி.
சித்தி தொடரிலும் என்னை உங்கள் வீட்டுப் பெண்ணாக நினைத்து ஆதத்தீர்கள். இந் நிலையில் அண்ணாமலைதொடரில் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் இருப்பதாக எனக்கு பலரும் குறிப்பாகமலேசியாவிலிருந்து ஏராளமான ஈ மெயில் கடிதங்கள் வந்தன.
மலேசியப் பெண்கள் அனைவரும் விபச்சாரிகள், மலேசிய உணவுகள் அனைத்தும் மனிதர்கள் சாப்பிடமுடியாதவை என்றெல்லாம் வசனங்கள் இருப்பதாக மலேசிய நண்பர்கள் சுட்டிக் காட்டியபோது அதிர்ந்தேன்.
இதுபோன்ற வசனங்களை இடம் பெறச் செய்யாதீர்கள், உண்மையான கதையிலிருந்து நழுவிச் செல்ல வேண்டாம்என்று இயக்குனர் பாஸ்கரிடம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து அவர் அதுபோலவே நடந்து வந்தார்.
இதனால் அவரை உடனடியாக ராடன் நிறுவனத்திலிருந்து விடுவித்துள்ளேன். இனிமேல் அண்ணாமலை தொடரைசுந்தர் கே விஜயன் இயக்குவார் என்று கூறியுள்ளார் ராதிகா.
இயக்குனர் சி.ஜே. பாஸ்கர் மீது ஏற்கனவே அண்ணாமலை தொடர் தொடர்பாக ஒரு சர்ச்சை எழுந்தது. அதில்நடித்த அனிதா மேத்யூஸ் என்ற நடிகை, சி.ஜே. பாஸ்கர் தன்னிடம் வரம்பு மீறிப் பேசுவதாகவும், நடந்துகொள்வதாகவும் புகார் கூறி தொடலிருந்து விலகினார்.
நடிகர், நடிகையரை பாஸ்கர் அடிமை போல நடத்துவதாகவும் புகார் உள்ளது. இப்போது பாஸ்கர் தொடலிருந்துநீக்கப்பட்டுள்ளார்.
ஆனால், ராதிகாவின் புகாரை பாஸ்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். சர்ச்சைக்குரிய வசனம் இடம்பெற்றது கடந்தஆண்டு ஏப்ரல் மாதம் தான். அதை இப்போது ராதிகா கிளறுவது ஏன் என்று தெரியவில்லை. உண்மையில் இந்தத்தொடரை 250 பகுதிகள்தான் நான் இயக்குவதாக இருந்தது. ஆனால், 500 பகுதிகளாக அதிகரிக்குமாறு ராதிகாவற்புறுத்தினார். நான் மறுக்கவே, என்னை நீக்கி விட்டு சுந்தர் கே விஜயனைப் போட்டுள்ளார். அதற்காக ஒருகதையை புனைந்துள்ளார் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே ராதிகா கர்ப்பமாக இருப்பதாகவும், இதனால் அண்ணாமலையில் இனி அவர் நடிக்கப்போவதில்லை என்றும் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக பானுப்பிரியா நடிப்பார் என்கிறார்கள்.