ஸ்பெஷல்ஸ்
அதிக பட்சமாக உடைகளைக் களைவதிலும் கவர்ச்சி காட்டுவதிலும் ராதிகா செளத்ரிக்கும் சங்கவிக்கும் இடையேகடும் போட்டி நடந்து வருகிறது.
இரண்டு பேர் என்ற படத்தில் ரொம்ப நாளைக்குப் பிறகு சங்கவி ஹீரோயினாக நடிப்பது தெரிந்த விஷயம்.
இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க தயாரிப்பாளரைச் சந்தித்து வாய்ப்புக் கேட்டார் ராதிகா செளத்ரி. ஆனால்,சங்கவி தான் ஹீரோயின், நீ வேண்டுமானால் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடலாம் என தயாரிப்பாளர் பச்சைக் கொடிஆட்டினார்.
இதை ஒப்புக் கொண்ட ராதிகா, சங்கவியை விட நான் தான் அதிகம் பேசப்பட வேண்டும். அந்த அளவுக்கு பாட்டுகவர்ச்சியாக இருக்க வேண்டும். எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு காட்டத் தயார் என்று அன்புக் கோரிக்கைவைத்தார்.
இதை தயாரிப்பாளரும் ஏற்றிக் கொள்ள ராதிகாவை அந்தப் பாடல் காட்சியில் உரித்து எடுத்துவிட்டார்டைரக்டர்.
இது தெரியவந்தவுடன் டென்சனான சங்கவியும் டைரக்டரிடம் போனார்.அவளை விட எனக்கு கவர்ச்சியானஉடைகள் வேண்டும்.
எல்லா காட்சிகளிலும் என்னை எவ்வளவு கவர்ச்சியாக காட்ட முடியுமோ அவ்வளவுகாட்டுங்கள் என்று வெளிப்படையாகவே கோரிக்கை வைக்க மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போய்விட்டார் டைரக்டர்.
இதையடுத்து அழுகிற சீனில் கூட சங்கவியை ஏகத்துக்கும் காட்டி இருக்கிறாராம் டைரக்டர்.
ராதிகா செளத்ரியும்சங்கவியும் காட்டிய கவர்ச்சியைப் பார்த்து சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்களே சூடாகிப் போய்விட்டார்களாம்.
என்னத்த சொல்றது!


Click it and Unblock the Notifications











