twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் ரகஸ்யா! குத்துப் பாட்டில் குதுப்மினார் உயரத்துக்குப் போய் அப்படியே காணாமல் போய்விட்ட ரகஸ்யா மீண்டும் தமிழ் சினிமா பக்கம் எட்டிப் பார்க்கிறார்.மும்பையிலிருந்து இயக்குனர் சரணால் கோலிவுட்டுக்கு கூட்டி வரப்பட்டவர் ரகஸ்யா.சிரிச்சு சிரிச்சு வந்தா சீனாதானா டோய் பாட்டுக்கு அவர் போட்ட ஒய்யார குத்து,குத்துப் பாட்டுக்களுக்குத் தனி இலக்கணவே வகுத்தது.ஒரே பாட்டில் உச்சத்துக்குப் போன ரகஸ்யா, சில படங்களில் குத்துப் பாட்டில் கொத்திஎடுத்தார்.ரொம்பக் கஷ்டப்படும் பேமிலி என்னுடையது என்று கூறி கண்ணீர்க் கதைகளைஎடுத்து விட்ட ரகஸ்யா மீது அனுதாபம் கொண்ட பல தயாரிப்பாளர்களும்,திரைப்படம் மூலமாகவும், வேறு வழியிலும் பேராதரவு தந்து பொருள் ஈட்டஉதவினர்.சினிமாவில் ஆட்டம் போட்டது போக, சென்னையில் உள்ள ஒரு நட்சத்திரஹோட்டலிலும் டான்ஸ் ஆடி வந்தார் ரகஸ்யா. படிப்படியாக அவர் மீது இருந்தகிரேஸ் குறைந்து ஒரு நாள் காணாமலேயே போய் விட்டார் ரகஸ்யா.வாய்ப்பு இல்லாததால் மும்பைக்கேத் திரும்பி விட்ட ரகஸ்யாவுக்கு இப்போத சூப்பர்வாய்ப்பு வந்துள்ளது.மோகன்லால், ஜீவா, கோபிகா நடிக்கும் அரண் படத்தில் தான் ஆட்டம் போடப்போகிறார் ரகஸ்யா. இந்த ஒத்தப் பாட்டுக்காக முன்பு முடிவு செய்துவைக்கப்பட்டிருந்தவர் ரீமா சென்.அப்போது அவருக்கு படம் எதுவும் கையில் இல்லாத நிலை. ஆனால் இப்போதுஅம்மணி, வல்லவன், திமிரு என படு பிசியாக இருப்பதால் என்னால் இந்தப்பாட்டுக்கு ஆட முடியாது என்று கூறி வாங்கிய அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்துவிட்டாராம்.இதனால் யாரைப் போடலாம் என்று யோசித்தவர்கள் கண்ணில் ரகஸ்யா வந்துவிழுந்தார். இதையடுத்து ரகஸ்யாவை அணுகியுள்ளனர். பேஷா ஆட்றேன் என்று கூறிரகஸ்யா அட்வான்ஸை வாங்கி கல்லாப் பொட்டியில் போட்டு விட்டு நேராகஸ்பாட்டுக்குப் போய் விட்டாராம்.இந்தப் பாட்டின் மீண்டும் தனது அலையை வலுவாகப் பரப்ப திட்டமிட்டுள்ளாராம்ரகஸ்யா.

    By Staff
    |
    குத்துப் பாட்டில் குதுப்மினார் உயரத்துக்குப் போய் அப்படியே காணாமல் போய்விட்ட ரகஸ்யா மீண்டும் தமிழ் சினிமா பக்கம் எட்டிப் பார்க்கிறார்.

    மும்பையிலிருந்து இயக்குனர் சரணால் கோலிவுட்டுக்கு கூட்டி வரப்பட்டவர் ரகஸ்யா.சிரிச்சு சிரிச்சு வந்தா சீனாதானா டோய் பாட்டுக்கு அவர் போட்ட ஒய்யார குத்து,குத்துப் பாட்டுக்களுக்குத் தனி இலக்கணவே வகுத்தது.

    ஒரே பாட்டில் உச்சத்துக்குப் போன ரகஸ்யா, சில படங்களில் குத்துப் பாட்டில் கொத்திஎடுத்தார்.

    ரொம்பக் கஷ்டப்படும் பேமிலி என்னுடையது என்று கூறி கண்ணீர்க் கதைகளைஎடுத்து விட்ட ரகஸ்யா மீது அனுதாபம் கொண்ட பல தயாரிப்பாளர்களும்,திரைப்படம் மூலமாகவும், வேறு வழியிலும் பேராதரவு தந்து பொருள் ஈட்டஉதவினர்.

    சினிமாவில் ஆட்டம் போட்டது போக, சென்னையில் உள்ள ஒரு நட்சத்திரஹோட்டலிலும் டான்ஸ் ஆடி வந்தார் ரகஸ்யா. படிப்படியாக அவர் மீது இருந்தகிரேஸ் குறைந்து ஒரு நாள் காணாமலேயே போய் விட்டார் ரகஸ்யா.

    வாய்ப்பு இல்லாததால் மும்பைக்கேத் திரும்பி விட்ட ரகஸ்யாவுக்கு இப்போத சூப்பர்வாய்ப்பு வந்துள்ளது.

    மோகன்லால், ஜீவா, கோபிகா நடிக்கும் அரண் படத்தில் தான் ஆட்டம் போடப்போகிறார் ரகஸ்யா. இந்த ஒத்தப் பாட்டுக்காக முன்பு முடிவு செய்துவைக்கப்பட்டிருந்தவர் ரீமா சென்.

    அப்போது அவருக்கு படம் எதுவும் கையில் இல்லாத நிலை. ஆனால் இப்போதுஅம்மணி, வல்லவன், திமிரு என படு பிசியாக இருப்பதால் என்னால் இந்தப்பாட்டுக்கு ஆட முடியாது என்று கூறி வாங்கிய அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்துவிட்டாராம்.

    இதனால் யாரைப் போடலாம் என்று யோசித்தவர்கள் கண்ணில் ரகஸ்யா வந்துவிழுந்தார். இதையடுத்து ரகஸ்யாவை அணுகியுள்ளனர். பேஷா ஆட்றேன் என்று கூறிரகஸ்யா அட்வான்ஸை வாங்கி கல்லாப் பொட்டியில் போட்டு விட்டு நேராகஸ்பாட்டுக்குப் போய் விட்டாராம்.

    இந்தப் பாட்டின் மீண்டும் தனது அலையை வலுவாகப் பரப்ப திட்டமிட்டுள்ளாராம்ரகஸ்யா.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X