காரைக்குடியில் ரகஸ்யா! ஞானராஜசேகரன் இயக்கத்தில், சத்யராஜ் நடிக்கும் பெரியார் படத்தில் ரகசியாவின்டான்ஸ் இடம்பெற்றுள்ளதாம்.ஐஏஎஸ் அதிகாரியான ஞானராஜசேகரன் பல தரமான படங்களை தமிழில்படைத்தவர். தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலை அருமையான படமாகபடைத்தார்.அதேபோல, பாரதியாரின் வாழ்க்கைச் சித்திரத்தை பாரதி என்ற பெயரில் காவியமாகஉருவாக்கினார். இப்போது பெரியாரின் வாழ்க்கையைப் படமாக்க முனைந்துள்ளார்.தந்தை பெரியாரின் தீவிர பக்தரான சத்யராஜ்தான் பெரியாராக நடிக்கிறார். இந்தப்படத்திற்கு தமிழக அரசு ரூ. 95 லட்சம் ஸ்பான்ஸர் செய்வதாக அறிவித்துள்ளது.படப்பிடிப்பு ஆரம்பித்து தொடங்கி காரைக்குடியில் வளர்ந்து வருகிறது. சமீபத்தில்ஒரு பாடலை சுட்டுள்ளார்கள். அதில் ஆடியவர் சீனா தானா ரகஸ்யா.இப்படத்தில் இவர் தாசி வேடத்தில் நடிக்கிறார். தாசியாக வரும் ரகஸ்யா ஆடுவதுபோல காட்சியாம். இதற்காக ரகஸ்யா வியர்க்க விறுவிறுக்க ஆடி முடிக்க அதைப்படம் பிடித்துள்ளார் ராஜசேகரன்.ரொம்ப காலத்திற்குப் பிறகு மீண்டும் தமிழில் தலை காட்டியுள்ளார் ரகஸ்யா. தமிழ்சினிமாவில் குத்தாட்டப் பாடல்களுக்கு புதிய வடிவம் கொடுத்தது வசூல்ராஜாவில்ரகஸ்யா போட்ட கெட்ட குத்தாட்டம்.ரொம்ப நாளைக்குப் பிறகு வந்திருக்கீங்க, எப்படி இருக்கீங்க என்று ரகஸ்யாவிடம்கேட்டால், தமிழில் 15 படங்களில் நடித்து விட்டேன், தெரியுமா? என்றுஆச்சரியத்தைத் தூக்கிப் பதிலாகப் போட்டார் ரகஸ்யா.அவரே தொடர்ந்து, பெரியார் படத்தில் தாசி வேடத்தில் நடிக்க வேண்டும் என்றுகேட்டார்கள். கேட்டதும் உடனே ஒத்துக் கொண்டு விட்டேன். பெரியார் படத்தில்நடிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ரொம்பப் பெருமையாக உள்ளது.இந்தப் பாடல் குத்துப் பாட்டு கிடையாது. பாரம்பரிய சிறப்பு வாய்ந்த ஒருபாடலுக்குத்தான் நான் நடனமாடியுள்ளேன். (அதுக்கு எதுக்கு உங்களைகூப்பிட்டாங்க) பாடலும் மிக நன்றாக வந்திருக்கிறது என்று பெருமை பொங்கபேசினார் ரகஸ்யா.கவர்ச்சியில் எல்லை தாண்டிவிடுகிறீர்களே என்று கேட்டால்,எந்த விஷயத்திற்குமே ஒரு எல்லை உண்டு. கவர்ச்சி காட்டுவதற்கும் ஒரு லிமிட்உண்டு. எல்லைக்குள் இருந்தால் அது கிளாமர், தாண்டினால் அது ஆபாசமாகி விடும்(ஓஹோ).எனக்கு இயற்கையிலேயே நல்ல உடல்வாகு (அதான் தெரியுமே). எனக்கு ஆடவும்வரும். அதற்காக ஆபாசமாக என்னால் ஆட முடியாது, ஆடவும் மாட்டேன்.நானாக விரும்பித்தான் கிளாமர் டான்ஸ் ஆட வந்தேன். காரணம், எனது குடும்பச்சூழ்நிலை அப்படி. அதேசமயம், ஆடி முடித்ததும் எல்லாப் பெண்களையும் போலவேநானும் ஒரு சாதாரண பெண்ணாக மாறி விடுவேன்.பாய் பிரண்டுகளுடன் சுற்றுவது, பார்ட்டிகளுக்குப் போவது என்று எந்தக் கெட்டபழக்கமும் எனக்குக் கிடையாது. படப்பிடிப்பு, ஹோட்டல் தான் என் உலகம் என்றுபிராக்டிகலாகப் பேசினார் ரகஸ்யா.ரகஸ்யாவுக்கு வேதிகா, ராக்கி, லட்சுமி, குட்டா என்று மேலும் நான்கு பெயர்களும்உண்டாம்.தமிழ் சினிமாவில் தான் ரகஸ்யாவாம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் போய்நடிக்கும்போதும் பெயர் மாறிவிடுமாம்.பெரியார் படத்துல, என்ன பாட்டுக்கு ஆடியிருக்கிறாரோ, எப்படி ஆடியிருக்கிறாரோ!
ஐஏஎஸ் அதிகாரியான ஞானராஜசேகரன் பல தரமான படங்களை தமிழில்படைத்தவர். தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலை அருமையான படமாகபடைத்தார்.
அதேபோல, பாரதியாரின் வாழ்க்கைச் சித்திரத்தை பாரதி என்ற பெயரில் காவியமாகஉருவாக்கினார். இப்போது பெரியாரின் வாழ்க்கையைப் படமாக்க முனைந்துள்ளார்.
தந்தை பெரியாரின் தீவிர பக்தரான சத்யராஜ்தான் பெரியாராக நடிக்கிறார். இந்தப்படத்திற்கு தமிழக அரசு ரூ. 95 லட்சம் ஸ்பான்ஸர் செய்வதாக அறிவித்துள்ளது.
படப்பிடிப்பு ஆரம்பித்து தொடங்கி காரைக்குடியில் வளர்ந்து வருகிறது. சமீபத்தில்ஒரு பாடலை சுட்டுள்ளார்கள். அதில் ஆடியவர் சீனா தானா ரகஸ்யா.
ரொம்ப காலத்திற்குப் பிறகு மீண்டும் தமிழில் தலை காட்டியுள்ளார் ரகஸ்யா. தமிழ்சினிமாவில் குத்தாட்டப் பாடல்களுக்கு புதிய வடிவம் கொடுத்தது வசூல்ராஜாவில்ரகஸ்யா போட்ட கெட்ட குத்தாட்டம்.
ரொம்ப நாளைக்குப் பிறகு வந்திருக்கீங்க, எப்படி இருக்கீங்க என்று ரகஸ்யாவிடம்கேட்டால், தமிழில் 15 படங்களில் நடித்து விட்டேன், தெரியுமா? என்றுஆச்சரியத்தைத் தூக்கிப் பதிலாகப் போட்டார் ரகஸ்யா.
அவரே தொடர்ந்து, பெரியார் படத்தில் தாசி வேடத்தில் நடிக்க வேண்டும் என்றுகேட்டார்கள். கேட்டதும் உடனே ஒத்துக் கொண்டு விட்டேன். பெரியார் படத்தில்நடிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ரொம்பப் பெருமையாக உள்ளது.
கவர்ச்சியில் எல்லை தாண்டிவிடுகிறீர்களே என்று கேட்டால்,
எந்த விஷயத்திற்குமே ஒரு எல்லை உண்டு. கவர்ச்சி காட்டுவதற்கும் ஒரு லிமிட்உண்டு. எல்லைக்குள் இருந்தால் அது கிளாமர், தாண்டினால் அது ஆபாசமாகி விடும்(ஓஹோ).
எனக்கு இயற்கையிலேயே நல்ல உடல்வாகு (அதான் தெரியுமே). எனக்கு ஆடவும்வரும். அதற்காக ஆபாசமாக என்னால் ஆட முடியாது, ஆடவும் மாட்டேன்.
பாய் பிரண்டுகளுடன் சுற்றுவது, பார்ட்டிகளுக்குப் போவது என்று எந்தக் கெட்டபழக்கமும் எனக்குக் கிடையாது. படப்பிடிப்பு, ஹோட்டல் தான் என் உலகம் என்றுபிராக்டிகலாகப் பேசினார் ரகஸ்யா.
ரகஸ்யாவுக்கு வேதிகா, ராக்கி, லட்சுமி, குட்டா என்று மேலும் நான்கு பெயர்களும்உண்டாம்.
தமிழ் சினிமாவில் தான் ரகஸ்யாவாம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் போய்நடிக்கும்போதும் பெயர் மாறிவிடுமாம்.
பெரியார் படத்துல, என்ன பாட்டுக்கு ஆடியிருக்கிறாரோ, எப்படி ஆடியிருக்கிறாரோ!


Click it and Unblock the Notifications