Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ரஹ்மானுக்கு கிடைக்குமா ஆஸ்கர்?
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அவரது இசையில்உருவான 3 பாடல்கள் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
திரையுலகின் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இருப்பினும் வட அமெரிக்கா மற்றும்இங்கிலாந்தில் திரையிடப்படும் ஆங்கிலப் படங்களுக்கே இந்த விருதுகள் பொதுவாக வழங்கப்படுகிறது.இதுதவிர வெளிநாட்டுப் படங்களுக்கென தனியாக ஒரு பிரிவை வைத்துள்ளனர்.ஆங்கிலப் படங்களுக்கான விருதுதான் என்றாலும் கூட உலகெங்கும் உள்ள திரையுலகினர் மத்தியில் ஆஸ்கர்விருதுக் கனவுகள் எப்போதும் கூடவே இருந்து கொண்டிருக்கும்.
இந் நிலையில் இந்த ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் பலமாகஅடிபடத் தொடங்கியுள்ளது. ஒரிஜினல் பாடல் பிரிவில் ரஹ்மான் இசையில் உருவான 3 பாடல்கள்பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
வாட்டர் படத்தில் இடம்பெற்ற சன் சன் பாடல், ரங் தே பசந்தி படத்தில் இடம் பெற்ற கல்பாலி, லுக்கா சுபி ஆகியஇரு பாடல்களும் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவில் மொத்தம் 56 பாடல்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரே இசையமைப்பாளரின் 3 பாடல்கள்இடம் பெற்றுள்ளது ரஹ்மானுடையது மட்டுமே. மேலும், ஆஸ்கர் வரலாற்றில் ஒரே இசையமைப்பாளரின் அதிகபாடல்கள் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதும் இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
ரஹ்மான் விருதுக்குப் பக்கத்த்தில் வந்து விட்டார். விருதைத் தட்டிச் செல்வாரா என்பதை பொறுத்திருந்துபார்ப்போம்.