தமிழ் - இந்தியில் படமாகும் ஏஆர் ரஹ்மான் கதைகள்!

By Shankar

Rahman now turns script writer
சென்னை: ஏ ஆர் ரஹ்மான் எழுதியுள்ள இரண்டு கதைகள் இப்போது தமிழ் மற்றும் இந்தியில் படங்களாகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக இசையமைப்போடு, கதை எழுதுவதிலும் தீவிர கவனம் செலுத்தி வந்தார் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்.

சும்மா மனம் போன போக்கில் எழுதவில்லை அவர். இதற்கென அமெரிக்காவில் திரைக்கதை எழுதுவது பற்றி ஒரு கோர்ஸ் படித்துள்ளார். ஹாலிவுட் படங்களின் இயக்குநர்களுடன் திரைக்கதை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக அவர் இரு கதைகளை எழுதி முடித்து, அதற்கான திரைக்கதையையும் உருவாக்கியுள்ளார். இந்தக் கதைகளை சில இயக்குனர்களிடம் சொன்னபோது, ரஹ்மானைப் பாராட்டியதோடு படமாக்கவும் முன்வந்தனர். தயாரிப்பாளர்களும் தயாராக உள்ளனர்.

இப்படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார். நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களை தேர்வு செய்த பிறகு படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கின்றனர்.

தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் இப்படங்களை எடுக்கிறார் ரஹ்மான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X