Don't Miss!
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அந்த கானா ராப் பாடலை டேபிளில் தட்டி பாடிக் காட்டினார் ரகுமான்... சங்கர் ஃபிளாஷ் பேக்
சென்னை: இயக்குநர் சங்கர் ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் ஆர்.சி 15 திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
நேற்றைய முன்தினம்தான் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானும் தானும் இணைந்து பணிபுரிந்த ஒரு பாடல் பற்றி சங்கர் சுவாரசியமாக கூறியுள்ளார்.
நீங்க மட்டும் சங்கர் படம் பண்ணுவீங்க. ஆனா நா இத பண்ணணுமா? 2 இயக்குநர்கள் உரையாடல்... யார் தெரியுமா?
காதலன்
ஜென்டில்மேன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட படம் காதலன். ஜென்டில்மேனில் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆனதால் இந்த படத்தின் பாடல்களுக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதனை அந்தப் படம் பூர்த்தியும் செய்தது. ஒவ்வொரு பாடலும் ஒவ்ஹி ஹிட் அடித்தன. குறிப்பாக முக்காலா முக்காபுலா பாடல் படத்தின் வெற்றியையே உறுதி செய்தது என சொல்லலாம். காரணம் ஏற்கனவே அப்போது பிரபலமாக இருந்த பிரபுதேவாவின் நடனத்தை கம்ப்யூட்டர் கிராபிக்சோட கலந்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் சங்கர் என்றே கூறலாம்.
பாடலாசிரியர் சங்கர்
பெரும்பாலான பாடல்களை வைரமுத்து அவர்களும் ஒரு பாடலை வாலி அவர்களும் எழுத பேட்டா ராப் பாடலை சங்கர் அந்தப் படத்தில் எழுதியிருந்தார். அவருடைய சினிமா கரியரில் அவர் எழுதிய ஒரே பாடலும் அதுதான்.
ரசித்த ரகுமான்
பரதநாட்டியம் சொல்லி கொடுக்கும் கலாக்ஷேத்ரம் போன்ற இடத்தில் கதாநாயகன் சென்று பேட்டா ராப் பாடி கதாநாயகியை கலாய்த்தால் எப்படி இருக்கும் என்ற சூழ்நிலையை விவரிக்க உடனே குதூகலம் ஆனாராம் ஏ.ஆர்.ரகுமான். ஷங்கர் பாடல் வரிகளை எழுதிக் கொடுக்க அப்போது பாடகர் சுரேஷ் பீட்டரை வரவழைத்து ரகுமான் கம்போசிங் செய்து டியூனுக்கு ஏற்றார் போல அவரும் சில வரிகளை சேர்த்தாராம்.
டேபிளில் தாளம்
வரிகள் அனைத்தும் தயாரானதும் அங்கிருந்து டேபிளில் தாளத்தை வாசித்து அந்தப் பாடலை பாடி காட்டினாராம். எல்லாம் சரியாக அமைந்தவுடன் உடனடியாக ரெக்கார்டும் செய்து விட்டார்களாம். அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த மற்ற பாடல்களைப் போல அல்லாமல் இந்தப் பாடலுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. காரணம் இந்த பாடலால் தான் கதாநாயகி நக்மா பிரபு தேவாவை திட்டி அனுப்புவார். அவரும் விரைவாக பரத நாட்டியம் கற்றுக் கொண்டு நக்மாவிடம் ஆடிக் காட்டுவார். அப்போதுதான் நக்மாவிற்கு காதல் மலரும். இப்படித்தான் எளிமையான முறையில் பேட்டா ராப் பாடல் உருவானது என்று இயக்குநர் சங்கர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.