Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அந்த கானா ராப் பாடலை டேபிளில் தட்டி பாடிக் காட்டினார் ரகுமான்... சங்கர் ஃபிளாஷ் பேக்
சென்னை: இயக்குநர் சங்கர் ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் ஆர்.சி 15 திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
நேற்றைய முன்தினம்தான் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானும் தானும் இணைந்து பணிபுரிந்த ஒரு பாடல் பற்றி சங்கர் சுவாரசியமாக கூறியுள்ளார்.
நீங்க மட்டும் சங்கர் படம் பண்ணுவீங்க. ஆனா நா இத பண்ணணுமா? 2 இயக்குநர்கள் உரையாடல்... யார் தெரியுமா?
காதலன்
ஜென்டில்மேன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட படம் காதலன். ஜென்டில்மேனில் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆனதால் இந்த படத்தின் பாடல்களுக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதனை அந்தப் படம் பூர்த்தியும் செய்தது. ஒவ்வொரு பாடலும் ஒவ்ஹி ஹிட் அடித்தன. குறிப்பாக முக்காலா முக்காபுலா பாடல் படத்தின் வெற்றியையே உறுதி செய்தது என சொல்லலாம். காரணம் ஏற்கனவே அப்போது பிரபலமாக இருந்த பிரபுதேவாவின் நடனத்தை கம்ப்யூட்டர் கிராபிக்சோட கலந்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் சங்கர் என்றே கூறலாம்.
பாடலாசிரியர் சங்கர்
பெரும்பாலான பாடல்களை வைரமுத்து அவர்களும் ஒரு பாடலை வாலி அவர்களும் எழுத பேட்டா ராப் பாடலை சங்கர் அந்தப் படத்தில் எழுதியிருந்தார். அவருடைய சினிமா கரியரில் அவர் எழுதிய ஒரே பாடலும் அதுதான்.
ரசித்த ரகுமான்
பரதநாட்டியம் சொல்லி கொடுக்கும் கலாக்ஷேத்ரம் போன்ற இடத்தில் கதாநாயகன் சென்று பேட்டா ராப் பாடி கதாநாயகியை கலாய்த்தால் எப்படி இருக்கும் என்ற சூழ்நிலையை விவரிக்க உடனே குதூகலம் ஆனாராம் ஏ.ஆர்.ரகுமான். ஷங்கர் பாடல் வரிகளை எழுதிக் கொடுக்க அப்போது பாடகர் சுரேஷ் பீட்டரை வரவழைத்து ரகுமான் கம்போசிங் செய்து டியூனுக்கு ஏற்றார் போல அவரும் சில வரிகளை சேர்த்தாராம்.
டேபிளில் தாளம்
வரிகள் அனைத்தும் தயாரானதும் அங்கிருந்து டேபிளில் தாளத்தை வாசித்து அந்தப் பாடலை பாடி காட்டினாராம். எல்லாம் சரியாக அமைந்தவுடன் உடனடியாக ரெக்கார்டும் செய்து விட்டார்களாம். அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த மற்ற பாடல்களைப் போல அல்லாமல் இந்தப் பாடலுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. காரணம் இந்த பாடலால் தான் கதாநாயகி நக்மா பிரபு தேவாவை திட்டி அனுப்புவார். அவரும் விரைவாக பரத நாட்டியம் கற்றுக் கொண்டு நக்மாவிடம் ஆடிக் காட்டுவார். அப்போதுதான் நக்மாவிற்கு காதல் மலரும். இப்படித்தான் எளிமையான முறையில் பேட்டா ராப் பாடல் உருவானது என்று இயக்குநர் சங்கர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.