ஸ்பெஷல்ஸ்
கல்யாணத்திற்குப் பிறகு நீஈஈஈஈஈஈஈஈண்ட ரெஸ்ட் எடுத்த ராஜகுமாரன் மீண்டும் திரைக் களத்தில் குதிக்கிறார்.
முதல் இரு படங்களை வெற்றிப் படங்களாக கொடுத்த ராஜகுமாரன் தனது மூன்றாவது படத்தையும் முத்திரைப் படமாக்கும் நோக்கத்தில் அட்டாகசமானகதையுடன் இயக்கத்தில் இறங்கவுள்ளார்.
இந்தப் படத்திற்கு காதலுடன் "ஓ" என்று பெயர் சூட்டியிருக்கிறார். முரளிதான் நாயகன். ஹீரோயின் தேவயானி என்று சொல்லத் தேவையில்லை.
ஆனால் இப்படத்தில் இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார். அதைக் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும்.
முதலில் தேவயானியை மட்டுமே முடிவு செய்திருந்தார். பிறகு என்ன நினைத்தாரோ, லைலாவும் இப்போது படத்தில் இருக்கிறார்.
வாழ்க்கையில் மட்டும் தேவயானி ஒருத்தர் போதும். ஆனால் படத்திற்கு இன்னொருவர் இருந்தால் பிசினசுக்கு நல்லது என்று அவருக்கு வேண்டியவட்டாரம் ஆலோசனை கூறியதால் கடைசி நிமிடத்தில் லைலாவையும் படத்தில் சேர்த்துள்ளாராம்.
யூ டூ ராஜகுமாரன்...?


Click it and Unblock the Notifications











