ரஜினியை அடுத்த படம்:இயக்கும் கன்னட இயக்குனர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமாரை வைத்து ஜோகி என்ற மாபெரும் வெற்றிப்படத்தைத் தந்த கன்னட இளம் இயக்குனர் பிரேமை தன்னுடைய அடுத்த படத்தைஇயக்குமாறு ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளாராம். சிவாஜிக்கு பின்னர் ரஜினி நடிக்கவுள்ள படத்தை பிரேம்தான் இயக்கப் போகிறார்என்கிறார்கள்.கன்னட திரையுலகை புரட்டிப் போட்டு வருபவர் இயக்குனர் பிரேம். இவர் இயக்கிய 3படங்களுமே அடுத்தடுத்து சூப்பர் ஹிட்.இதனால் பிரேம் மீது ரஜினிக்கு தனி மரியாதை. இவரது ஜோகி படம் தான் பரட்டைஎன்ற அழகுசுந்தரமாக எனும் பெயரில் தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது.இதில் ரஜினியின் மருமகன் தனுஷ் நடிக்கிறார். தனுஷை இந்தக் கதையில் நடிக்கச்சொல்லி ரெக்கமெண்ட் செய்ததே ரஜினி தான். பரட்டையை இயக்குவது நடனஇயக்குனர் ராஜூ சுந்தரம்.பிரேம் இப்போது கன்னடத்தில் ப்ரீத்தி ஏக்கே பூமிமேலிதே என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் பெங்களூரில் நடந்தது. இதில் கலந்துகொண்டார் ரஜினிகாந்த்.படத்தின் கதையைக் கேட்ட ரஜினி பிரேமை வெகுவாக பாராட்டினாராம். அப்போதுஎனது அடுத்த படத்தை நீங்கள்தான் இயக்குகிறீர்கள் என்றும் கூறியுள்ளார் ரஜினி.இதனால் பூரித்துப் போயிருக்கிறார் பிரேம்.பிரேம் கூறுகையில், ப்ரீத்தி ஏக்கே பூமிமேலிதே படத்தை இயக்கி, நடித்தும்வருகிறேன். அடுத்து ராஜ்குமாரின் இளைய மகன் புனீத் ராஜ்குமாருக்காக ஒருகதையை தயார் செய்து வருகிறேன்.நான் இயக்கி ஜோகி படத்தை ரஜினிகாந்த் பார்த்து பாராட்டினார். எனது அடுத்தபடத்தை நீங்கள்தான் இயக்குகிறீர்கள் என்றும் கூறியுள்ளார். சிவாஜி படத்தைமுடித்துவிட்டு எனது இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகிறார். அதற்காக ஆவலோடுகாத்திருக்கிறேன் என்கிறார் பிரேம்.இந்த பிரேம் தான் நடிகை ரக்ஷிதாவோடு சேர்ந்து கிசுகிசுக்கப்படுபவர் என்பது குறிப்பட்டத்தக்கது. பிரேமைகைப்படிக்க கன்டன நடிகை ரக்ஷிதா கடும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம். ரக்ஷிதா சிம்புவுடன் நடித்துதமிழில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யுடனும் நடித்தார். ஆனால் தமிழில் தேறாததால்தெலுங்குக்குப் போய்விட்டார்.
ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமாரை வைத்து ஜோகி என்ற மாபெரும் வெற்றிப்படத்தைத் தந்த கன்னட இளம் இயக்குனர் பிரேமை தன்னுடைய அடுத்த படத்தைஇயக்குமாறு ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளாராம். சிவாஜிக்கு பின்னர் ரஜினி நடிக்கவுள்ள படத்தை பிரேம்தான் இயக்கப் போகிறார்என்கிறார்கள்.
கன்னட திரையுலகை புரட்டிப் போட்டு வருபவர் இயக்குனர் பிரேம். இவர் இயக்கிய 3படங்களுமே அடுத்தடுத்து சூப்பர் ஹிட்.
இதனால் பிரேம் மீது ரஜினிக்கு தனி மரியாதை. இவரது ஜோகி படம் தான் பரட்டைஎன்ற அழகுசுந்தரமாக எனும் பெயரில் தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது.
இதில் ரஜினியின் மருமகன் தனுஷ் நடிக்கிறார். தனுஷை இந்தக் கதையில் நடிக்கச்சொல்லி ரெக்கமெண்ட் செய்ததே ரஜினி தான். பரட்டையை இயக்குவது நடனஇயக்குனர் ராஜூ சுந்தரம்.
பிரேம் இப்போது கன்னடத்தில் ப்ரீத்தி ஏக்கே பூமிமேலிதே என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் பெங்களூரில் நடந்தது. இதில் கலந்துகொண்டார் ரஜினிகாந்த்.
படத்தின் கதையைக் கேட்ட ரஜினி பிரேமை வெகுவாக பாராட்டினாராம். அப்போதுஎனது அடுத்த படத்தை நீங்கள்தான் இயக்குகிறீர்கள் என்றும் கூறியுள்ளார் ரஜினி.இதனால் பூரித்துப் போயிருக்கிறார் பிரேம்.
பிரேம் கூறுகையில், ப்ரீத்தி ஏக்கே பூமிமேலிதே படத்தை இயக்கி, நடித்தும்வருகிறேன். அடுத்து ராஜ்குமாரின் இளைய மகன் புனீத் ராஜ்குமாருக்காக ஒருகதையை தயார் செய்து வருகிறேன்.
நான் இயக்கி ஜோகி படத்தை ரஜினிகாந்த் பார்த்து பாராட்டினார். எனது அடுத்தபடத்தை நீங்கள்தான் இயக்குகிறீர்கள் என்றும் கூறியுள்ளார். சிவாஜி படத்தைமுடித்துவிட்டு எனது இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகிறார். அதற்காக ஆவலோடுகாத்திருக்கிறேன் என்கிறார் பிரேம்.
இந்த பிரேம் தான் நடிகை ரக்ஷிதாவோடு சேர்ந்து கிசுகிசுக்கப்படுபவர் என்பது குறிப்பட்டத்தக்கது. பிரேமைகைப்படிக்க கன்டன நடிகை ரக்ஷிதா கடும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம். ரக்ஷிதா சிம்புவுடன் நடித்துதமிழில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யுடனும் நடித்தார். ஆனால் தமிழில் தேறாததால்தெலுங்குக்குப் போய்விட்டார்.


Click it and Unblock the Notifications