Don't Miss!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஊழல் ஒழிப்பு: ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்
லோக்பால் மசோதா கோரி கடந்த ஏப்ரல் மாதம் முதல்முறையாக அன்னா ஹஸாரே உண்ணாவிரதமிருந்தபோது தென்னகத்திலிருந்து அவருக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த்.
அதன் பிறகு உடல்நிலை சரியில்லாமல் போய், சிகிச்சைப் பெற்று நலமுடன் திரும்பி வந்த ரஜினி, இந்த முறை வலுவான லோக்பால் கோரி ஹஸாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக கடிதம் எழுதினார். அன்னா ஹஸாரே மூலம் ரத்தமற்ற புரட்சி நாட்டில் உருவாகியுள்ளதாகவும், ஊழலை ஒழித்தே தீர வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.
இதைத் தொடர்ந்து ரஜினியின் தீவிர ரசிகர்களும் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர்.
முதல் உண்ணாவிரதம் சோளிங்கர் நகரில் ஆரம்பித்துள்ளது. வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் சோளிங்கர் ரவி தலைமையில் இந்த உண்ணாவிரதம் நடந்து வருகிறது.
ஏராளமான ரஜினி ரசிகர்கள் திரண்டு வந்து இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். ரஜினி ரசிகர்களுக்கு ஆதரவாக மற்ற நடிகர்களின் ரசிகர்களும், அரசியல் கட்சியினரும் பொது மக்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து சேளிங்கர் ரவி கூறுகையில், "எங்கள் தலைவர் ரஜினிகாந்த் தனது படங்களில் தொடர்ந்து லஞ்சம், ஊழல் ஆகியவை எதிர்த்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'சிவாஜி' திரைப்படத்தில் லஞ்சம் லாவண்யத்தால் நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி கூறினார். சொல்வது மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையில் எப்போதும் நேர்மையை கடைப்பிடித்து வருபவர் அவர்.
ஊழலற்ற இந்தியா உருவாக வேண்டும் என்பதே அவரின் நீண்ட நாள் கனவு. அந்த கனவை நிறைவேற்றக்கூடிய ஜன் லோக்பால் சட்டமசோதவை அமல்படுத்தக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு இருக்கும் சமூக சேவகர் அன்னா ஹசாரே அவர்களுக்கு ரஜினி ஆதரவு தெரிவித்த 24 மணி நேரத்தில் நாங்கள் உண்ணா விரதம் மேற்கொண்டுள்ளோம்.
எங்களுடன் 200 பேர் ரசிகர்கள் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்," என்றார்.
-
பெரிய முதலையிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சின்ன மீன்கள்.. பேராசை பெருநஷ்டமாகிடுச்சே!
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?