Don't Miss!
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- News அயிலை, கட்லா, ஜிலேபி.. சிவகங்கையில் பரவசம்.. திருப்பத்தூர் கண்மாயில் துள்ளிய மீன்கள்.. செம ஆச்சரியம்
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
கலைஞர் திரை ஊர்... அடிக்கல் நாட்டுவிழாவில் ரஜினி-கமல்!
இந்த விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இருவரும் பங்கேற்று, படப்பிடிப்பு தளம் மற்றும் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள்.
திரைப்பட தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வீடு கட்டுவதற்காக, சென்னையை அடுத்த பையனூரில் 65 ஏக்கர் நிலத்தை முதல்வர் கருணாநிதி வழங்கியிருக்கிறார்.
அங்கு, திரையுலகை சேர்ந்தவர்களுக்கு வீடுகளும், ஒரு படப்பிடிப்பு தளமும், ஒரு மருத்துவமனையும் கட்டப்படுகிறது. இதற்கு, கலைஞரின் திரை ஊர் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
கலைஞரின் திரை ஊருக்கான அடிக்கல் நாட்டு விழா, பையனூரில் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. விழாவில், முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக ரஜினி, கமல் இருவரும் பங்கேற்கிறார்கள்.
திரைப்பட நகருக்கு முதல்வர் அடிக்கல் நாட்ட, நகரின் படப்பிடிப்பு தளத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி அடிக்கல் நாட்டுகிறார். மருத்துவமனைக்கு கமல்ஹாசன் அடிக்கல் நாட்டுகிறார்.
இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது.
இதுபற்றி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் கூறுகையில், "23 ஆயிரம் திரைப்பட தொழிலாளர்களின் இல்லமும், தொழிலகமும் கொண்ட 'கலைஞரின் திரை ஊர்' வெகுவிரைவாக உருவாக ஆக்கப்பணிகள் தொடங்க ஆரம்பித்துவிட்டன.
திரைத் துறையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 65 ஏக்கர் நிலப்பரப்பையும் நேற்று காட்டினார்கள் வருவாய்த் துறை அதிகாரிகள்.
கலைஞரின் திரை ஊரில், ஹாலிவுட் தரத்தில் ஒரு படப்பிடிப்பு தளமும் கட்டப்படுகிறது. கூடவே ஒரு பாடல் பதிவு கூடமும், எடிட்டிங், டப்பிங் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் சினிமா தொழிலுக்கு பெயர்பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மாதிரி, 'கலைஞரின் திரை ஊர்,' இந்தியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமாக அமையவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதற்கான பணிகளில் இறங்கியுள்ளோம்" என்றார்.