Don't Miss!
- News பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தொடர்ந்த வழக்கில் ஹைகோர்ட் கேள்வி
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கலைஞர் திரை ஊர்... அடிக்கல் நாட்டுவிழாவில் ரஜினி-கமல்!
இந்த விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இருவரும் பங்கேற்று, படப்பிடிப்பு தளம் மற்றும் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள்.
திரைப்பட தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வீடு கட்டுவதற்காக, சென்னையை அடுத்த பையனூரில் 65 ஏக்கர் நிலத்தை முதல்வர் கருணாநிதி வழங்கியிருக்கிறார்.
அங்கு, திரையுலகை சேர்ந்தவர்களுக்கு வீடுகளும், ஒரு படப்பிடிப்பு தளமும், ஒரு மருத்துவமனையும் கட்டப்படுகிறது. இதற்கு, கலைஞரின் திரை ஊர் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
கலைஞரின் திரை ஊருக்கான அடிக்கல் நாட்டு விழா, பையனூரில் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. விழாவில், முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக ரஜினி, கமல் இருவரும் பங்கேற்கிறார்கள்.
திரைப்பட நகருக்கு முதல்வர் அடிக்கல் நாட்ட, நகரின் படப்பிடிப்பு தளத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி அடிக்கல் நாட்டுகிறார். மருத்துவமனைக்கு கமல்ஹாசன் அடிக்கல் நாட்டுகிறார்.
இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது.
இதுபற்றி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் கூறுகையில், "23 ஆயிரம் திரைப்பட தொழிலாளர்களின் இல்லமும், தொழிலகமும் கொண்ட 'கலைஞரின் திரை ஊர்' வெகுவிரைவாக உருவாக ஆக்கப்பணிகள் தொடங்க ஆரம்பித்துவிட்டன.
திரைத் துறையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 65 ஏக்கர் நிலப்பரப்பையும் நேற்று காட்டினார்கள் வருவாய்த் துறை அதிகாரிகள்.
கலைஞரின் திரை ஊரில், ஹாலிவுட் தரத்தில் ஒரு படப்பிடிப்பு தளமும் கட்டப்படுகிறது. கூடவே ஒரு பாடல் பதிவு கூடமும், எடிட்டிங், டப்பிங் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் சினிமா தொழிலுக்கு பெயர்பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மாதிரி, 'கலைஞரின் திரை ஊர்,' இந்தியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமாக அமையவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதற்கான பணிகளில் இறங்கியுள்ளோம்" என்றார்.