Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா - ரஜினி, கமல் பங்கேற்கிறார்கள்!
இந்த விழாவில் இந்திய சினிமாவின் சாதனை நாயகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாஸன், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பிக்கிறார்கள்.
இந்திய மக்களின் உணர்வோடு இரண்டறக் கலந்த விஷயம் சினிமா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, வங்காள, ஒரியா, போஜ்புரி மொழிகளில் சினிமாக்கள் ஏராளமாக தயாராகி வருகின்றன.
இந்தியாவில் சினிமா படங்கள் உருவாக ஆரம்பித்து. 100 ஆண்டுகள் ஓடிவிட்டன.
இந்த நூற்றாண்டு விழாவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சென்னையில் கொண்டாட முடிவு செய்துள்ளது. இதற்குக் காரணம், இன்றைக்கு சினிமா அந்த மொழி மாநிலத் தலைநகர்களில் தயாராகின்றன. ஆனால், ஆரம்பத்தில் மும்பையை விட அதிகமாக சென்னையில்தான் அனைத்து மொழி சினிமாக்களும் தயாராகின.
பெரும்பாலான இந்திப் படங்கள், சென்னை ஸ்டுடியோக்களில் உருவானது ஒரு இனிய வரலாறு. எண்பதுகளுக்குப் பிறகுதான் சென்னையிலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு சினிமா இடம் பெயர்ந்தது.
எனவே இந்தியா சினிமாவின் நூற்றாண்டு விழாவை சென்னையில் கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த விழாவுக்கு பிலிம்சேம்பர் ஏற்பாடு செய்துள்ளது.
இதுபற்றி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண் கூறுவகையில், "இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தென்னிந்திய சினிமா துறை தொடங்கி வைக்க வேண்டும் என்று விரும்பினோம். அதன்படி ஏப்ரல் 26, 27, 28ம் தேதிகளில் விழாவை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
விழா தொடக்கத்தில் திரைப்பட உருவாக்கம் பற்றிய பயிற்சிபட்டறை நடத்த பேசிவருகிறோம். மாலையில் நடனம், இசை உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடக்கும். கடைசி நாளன்று இந்திய சினிமாவின் முக்கியமான முகங்கள் பங்குபெறும் வகையில் விழாவை நடத்த இருக்கிறோம்.
சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டரங்கில் விழா நடைபெறும். தற்போது அங்கு சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து சரியான நேரத்தில் அரங்கம் கிடைக்க உதவுமாறு கேட்கப் போகிறோம்," என்றார்.
இந்த விழாவில் தென்னிந்திய நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், அம்பரீஷ், சிரஞ்சீவி உட்பட பலர் கலந்துகொள்கிறார்கள். அமிதாப் உள்ளிட்ட பாலிவுட் கலைஞர்களை அழைக்கும் திட்டமும் உள்ளதாம்.