Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
புதிய நடிகர்களுக்கு ரஜினி, கமல் வாழ்த்து!
இவர்கள் அனைவருக்கும் தங்கள் வாழ்த்துக்களைக் கூறியுள்ளனர் சூப்பர் ஸ்டார் ரஜினியும் கமல்ஹாஸனும்.
பிரபல பாடகர் மனோ, இயக்குநர் சந்தானபாரதி உள்பட 10 பிரபலங்களின் வாரிசுகளை தனது நாங்க படத்தில் அறிமுகப்படுத்துகிறார் செல்வா.
படத்தில் நடித்தவர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அத்தனைபேருமே சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல்ஹாஸனை சந்தித்து வாழ்த்துப் பெற விரும்பினார்கள்.
ரஜினியைச் சந்திக்க மனோ ஏற்பாடு செய்திருந்தார். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, அனைவரையும் சந்தோஷத்துடன் வரவேற்ற ரஜினி, இயக்குநர் செல்வாவிடம் படத்தின் கதையைக் கேட்டுள்ளார். குறிப்பாக எண்பதுகளின் பின்னணியில் நடக்கும் கதை என்பதைக் கேட்டு, “நல்ல விஷயம். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்னு தெரியுது… நல்லா வரும். வாழ்த்துக்கள்," என்று ஆசீர்வதித்துள்ளார்.
கமல்ஹாஸனைச் சந்திக்க இயக்குநர் சந்தான பாரதி ஏற்பாடு செய்திருந்தார். புதியவர்களுக்கு வாழ்த்துச் சொன்ன கமல், புதியவர்கள் குறிப்பாக வாரிசுகள் வருவது நல்லதுதான், என்றாராம்.