twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு! முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், விஜய், சூர்யா மற்றும் அஜீத் ஆகியோர் நடித்த படங்களை 3ஆண்டுகள் கழித்தே டிவியில் ஒளிபரப்ப அனுமதி தர வேண்டும் என்று திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும்வினியோகஸ்தர்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.இதுதொடர்பாக முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில்,கமல், ரஜினி, விக்ரம், விஜய், சூர்யா, அஜீத் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள்மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் படங்கள் நன்றாக இருந்தால் மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களைபார்ப்பதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.இந் நிலையில் இந்த முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை வாங்க டிவி நிறுவனங்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றன(முக்கியமாக சன் டிவி). சில தயாரிப்பாளர்கள் அந்தப் படங்களை உடனடியாக நல்ல விலைக்கு டிவிக்களுக்கு விற்றுவிடுகிறார்கள்.இதனால் என்ன ஆகிறது என்றால், படத்தை வாங்கிய டிவி நிறுவனங்கள், அந்தப் படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும்போதே டிவியிலும் ஒளிபரப்பி விடுகின்றன. இதனால் தியேட்டர்களில் வசூல் மிகக் கடுமையாகபாதிக்கப்படுகிறது.எனவே ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை 3 வருடங்கள் கழித்தே டிவியில் ஒளிபரப்ப அனுமதிப்பதுஎன்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.அதேசமயம் சத்யராஜ், மாதவன், சிம்பு, தனுஷ் போன்ற நடிகர்களின் படங்களை ஒரு ஆண்டு கழித்து டிவியில் ஒளிபரப்பஅனுமதிக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    By Staff
    |

    முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், விஜய், சூர்யா மற்றும் அஜீத் ஆகியோர் நடித்த படங்களை 3ஆண்டுகள் கழித்தே டிவியில் ஒளிபரப்ப அனுமதி தர வேண்டும் என்று திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும்வினியோகஸ்தர்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.


    இதுதொடர்பாக முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில்,

    கமல், ரஜினி, விக்ரம், விஜய், சூர்யா, அஜீத் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள்மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் படங்கள் நன்றாக இருந்தால் மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களைபார்ப்பதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

    இந் நிலையில் இந்த முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை வாங்க டிவி நிறுவனங்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றன(முக்கியமாக சன் டிவி). சில தயாரிப்பாளர்கள் அந்தப் படங்களை உடனடியாக நல்ல விலைக்கு டிவிக்களுக்கு விற்றுவிடுகிறார்கள்.

    இதனால் என்ன ஆகிறது என்றால், படத்தை வாங்கிய டிவி நிறுவனங்கள், அந்தப் படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும்போதே டிவியிலும் ஒளிபரப்பி விடுகின்றன. இதனால் தியேட்டர்களில் வசூல் மிகக் கடுமையாகபாதிக்கப்படுகிறது.

    எனவே ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை 3 வருடங்கள் கழித்தே டிவியில் ஒளிபரப்ப அனுமதிப்பதுஎன்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    அதேசமயம் சத்யராஜ், மாதவன், சிம்பு, தனுஷ் போன்ற நடிகர்களின் படங்களை ஒரு ஆண்டு கழித்து டிவியில் ஒளிபரப்பஅனுமதிக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X