Don't Miss!
- Lifestyle உங்க உடம்பை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு கவசம் வேணுமா? இந்த உணவில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
தான் நடித்த பாடல்கள் பற்றியே ரஜினிக்கு தெரியவில்லை... மறைந்த கவிஞர் வாலியின் முன்னாள் பேட்டி
சென்னை: தமிழ் சினிமாவின் உச்சபட்ச கவிஞராக விளங்கிய கண்ணதாசன் இருந்த காலக் கட்டத்திலேயே தனக்கென ஒரு இடம் பிடித்தவர் வாலி.
அதுமட்டுமின்றி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆஸ்தான கவிஞராக வாலி பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
வாலி அவர்கள் முன்னதாக கொடுத்துள்ள ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போல அடுத்து வந்த எந்த நடிகருக்கும் பாடல்கள் மீது அக்கறையில்லை என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
விஜய்க்கு அவ்வளவு தான் மரியாதை..தமிழ் சினிமா மார்க்கெட்டை ஏன் கெடுக்கிறீர்கள்..கே.ராஜன் விளாசல்!
வாலி எம்.ஜி.ஆர் நட்பு
எம்.ஜி.ஆரின் பல வெற்றிப் பாடல்களை எழுதியவர் வாலி. அவர் எழுதிய பாடல்கள்தான் பின்னர் தேர்தல் நேரத்தில் இன்றுவரை ஒலிபரப்பப்படுகிறது. எம்.ஜி.ஆருக்கு முதல் நாள் வைத்த மீன் குழம்பு மறுநாள் காலையில் தினமும் உண்ணும் பழக்கம் இருந்ததாம். அதை உண்பதற்காகவே பெரும்பாலும் வாலி அவரை காலையில் சந்திக்கச் செல்வாராம். அந்த அளவிற்கு ஒரு நடிகருக்கும் கவிஞருக்கும் நட்பு இருந்துள்ளது.
சிவாஜி வாலி கூட்டணி
எம்.ஜி.ஆருக்கு அதிக பாடல்கள் எழுதிய காரணத்தினாலேயே ஆரம்ப காலகட்டத்தில் சிவாஜி கணேசன் படங்களுக்கு பாடல்கள் எழுத வாய்ப்பு அமையவில்லையாம் வாலிக்கு. அதன் பின்னர் அவருடைய படங்களுக்கும் எழுத ஆரம்பித்த வாலி எம்.ஜி.ஆர் படங்களை விட சிவாஜி படங்களுக்குத்தான் அதிகமாக எழுதியுள்ளதாக கூறியிருக்கிறார். எம்.ஜி.ஆரும் சிவாஜியும் பாடல்கள் எழுதும்போது உடன் இருப்பார்கள். அதேபோல அந்தக் காலத்தில் கவிஞர்கள் இல்லாமல் பாடல் பதிவும் நடைபெறவே பெறாது.
இரவு நேர பதிவு
இப்போதுள்ள இசையமைப்பாளர்கள் பெரும்பாலும் இரவில்தான் இசையமைத்து பாடல்களை பதிவு செய்கிறார்கள். அதன் காரணமாகவே பாடல் பதிவின்போது என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. யுவன் சங்கர் ராஜாவை நான் சந்தித்து பத்து ஆண்டுகள் ஆகிறது. ஆனால் தொடர்ச்சியாக யுவன் இசையில் பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்படி இரவில் பாடல் பதிவு நடைபெறுவதாலேயோ என்னவோ எந்த நடிகரும் பாடல்களின் விவரங்களை நேரம் ஒதுக்கி கேட்பதில்லை என்று வாலி கூறியிருக்கிறார்.
வாலி கேட்ட கேள்வி
ஒருமுறை வாலியும் ரஜினியும் நேரில் சந்தித்தபோது, ரஜினிகாந்த் நடித்த பல பாடல்களை குறிப்பிட்டு, இந்தப் பாடல்களை யார் எழுதியது என்று கேட்டாராம். அதற்கு தெரியவில்லை என்று ரஜினி கூறியிருக்கிறார். அப்போது, இவை அனைத்தும் நான் எழுதிய பாடல்கள்தான் என்று வாலி கூறினாராம். அப்படிப்பட்ட வாலி அவர்கள் எம்.ஜி.ஆர் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.