ஸ்பெஷல்ஸ்

By Staff

ராஜ்கிரணின் ரகசிய மனைவியான பத்மஜோதி செக்ஸ் டாக்டர் பிரகாஷின் ப்ளூ பிலிம்களில் நடித்தவர் என்றுதெரிய வந்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்த வருமான வரி அதிகாரியான இளங்கோவனின் மனைவி தான் பத்மஜோதி. இந்தத்தம்பதியினருக்கு சண்முகப்பிரியா என்ற மகளும் அசோக்குமார் என்ற மகனும் உண்டு.

பத்மஜோதிக்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை எப்போதுமே உண்டு. அதனால் தன் உடலைவிற்றுச் சம்பாதிக்கவும் அவர் தயாராக இருந்தார். இதனால் அவரிடமிருந்து இளங்கோவன் பிரிந்தார்.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள பல முக்கிய நகரங்களுக்கும் சென்ற பத்மஜோதி தன்னுடைய பெயரையும் மம்தா,பிரமிளா, பானு, மீனுகுட்டி, ரோசாகுட்டி என்று மாற்றி மாற்றி வைத்துக் கொண்டு தன் உடலை விற்று உல்லாசவாழ்க்கை வாழத் தொடங்கினார்.

பல்வேறு சினிமா ஸ்டார்களுக்கும் தொழில் அதிபர்களுக்கும் வாடகை மனைவியாகவே வாழ்ந்து வந்தார்பத்மஜோதி.

அப்போது தான் திடீரென பத்மஜோதி கர்ப்பமாகி பின்னர் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார். ஆனால்ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவின் மனைவியான சிவபார்வதியின் குழந்தை தான் இக்குழந்தைஎன்று பத்மஜோதி கூறி வந்தார்.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த அலமேலு என்பவரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த வழக்கு தொடர்பாகபத்மஜோதியை நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து கடந்த மே 30ம் தேதி சிறையில் அடைத்தனர்.

சில மாதங்களுக்கு முன் தமிழகத்தையே கலக்கிய செக்ஸ் டாக்டர் பிரகாஷின் ப்ளூ பிலிம் ஒன்றில் பத்மஜோதிநடித்த விஷயம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.டாக்டர் பிரகாஷின் "உல்லாச உறவுகள்" என்ற ப்ளூ பிலிமில் தான் பத்மஜோதி நடித்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி.வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் தான் கடந்த ஆண்டு ஆகஸ்டு 18ம் தேதி பத்மஜோதியும் ராஜ்கிரணும் மோதிரம் மாற்றி திருமணம்கொண்டதாக பாண்டிச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபரான பாலசுப்பிரமணியம் என்பவர் சமீபத்தில் தெரிவித்தார்.

இதைப் பற்றியும் பத்மஜோதியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்துள்ளனர். ராஜ்கிரணை ரகசியமாகத் திருமணம்செய்து கொண்ட பிறகு தான் பத்மஜோதிக்கு அந்தப் பெண் குழந்தை பிறந்ததாகவும் இவ்விசாரணையின் போதுதெரிய வந்தது. எனவே அந்தக் குழந்தை ராஜ்கிரணின் மகளாக இருக்கக் கூடும் என்றும் தெரிகிறது.

ராஜ்கிரண் தலைமறைவு?

இதற்கிடையே ராஜ்கிரணும் பத்மஜோதியும் சேர்ந்து கொண்டு பெட்ரோல் பங்க் வைப்பதற்கு லைசென்ஸ் வாங்கித்தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் வரை மோசடி செய்து விட்டதாகவும் பாண்டிச்சேரி போலீசாரிடம் பாலசுப்பிரமணியம்புகார் கூறினார்.

இந்தப் புகார் நிரூபிக்கப்பட்டால் ராஜ்கிரண் விரைவில் கைதாவார் என்று போலீசாரும் கூறி, அவரைத் தேடஆரம்பித்தனர். ஆனால் தற்போது ராஜ்கிரண் தலைமறைவாகி விட்டார்.

பாண்டிச்சேரியில் அவருடைய வீட்டிற்குச் சென்று போலீசார் பார்த்த போது அங்கு தற்போது வேறு சிலர் வசித்துவருவது தெரிய வந்தது. அந்த வீட்டுக்குத் தர வேண்டிய பல மாத கால வாடகைப் பணத்தைக் கூட தராமல் அவர்வீட்டைக் காலி செய்து விட்டுப் போய்விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சென்னையில் வளசரவாக்கம், சாலிகிராமம், நீலாங்கரை, கொட்டிவாக்கம் உள்பட பல பகுதிகளிலும்ராஜ்கிரணைப் போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவான ராஜ்கிரண் மதுரைப் பக்கமும் சென்றிருக்கலாம்என்றும் கருதும் போலீசார் அங்கும் சென்று தேடிக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X