Don't Miss!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிரஞ்சீவி மகனுக்கு வரதட்சணை ரூ 120 கோடி & ஒரு குட்டிவிமானம்!
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண். இவர் பிறந்து வளர்ந்து படித்ததெல்லாம் தமிழகத்தில்தான்.
1980-ல் தஞ்சாவூரில் பிறந்தார். ஊட்டி கான்வென்ட் மற்றும் சென்னை லயோலா கல்லூரியில் படித்தார். நன்றாக தமிழ் பேசத் தெரிந்தவர்.
2007-ல் சிறுத்த என்ற தெலுங்கு படம் மூலம் ராம்சரண் கதாநாயகனாக அறிமுகமானார். 2009-ல் அவர் நடித்த மகதீரா படம் ரிலீசாகி ஆந்திராவில் வசூலை அள்ளியது. இப்படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப் பட்டது.
இப்போது ரச்சா என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து மணமகளும் பார்த்துவிட்டனர். மணமகள் பெயர் உபாசனா கேமினேனி. அப்பல்லோ குழுமத்தின் தலைவர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தி இவர். அப்பல்லோ அறக்கட்டளையின் துணைத் தலைவராகவும், பி பாஸிடிவ் என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் உள்ளார். இது காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ராம்சரணுக்கு ரூ.120 கோடி வரதட்சணை அளிக்கப்பட உள்ளதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவியுள்ளது.
திருமண பரிசாக ஜெர்மனியில் தயாரான நவீன ரக குட்டி விமானம் ஒன்று வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.