Don't Miss!
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்!
முதலில் கேரளா...
பிற மொழிப் படங்களை இரு வாரங்களுக்குப் பிறகே கேரளாவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியாக பெரும் சவாலைச் சந்தித்துவரும் மலையாளத் திரைப்படங்களை காக்க இந்த ஏற்பாடு.
இந்த கட்டுப்பாட்டை அலட்சியம் செய்துவிட்டு, பிக் பிக்சர்ஸ் 'கைட்ஸ்' படத்தை கேரளா முழுவதும் ஏராளமான தியேட்டர்களில் வெளியிட்டது. இதனால் கொதித்தெழுந்த கேரள திரையுலகினர் ரிலையன்ஸின் பிக் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரெட் கார்டு விதித்துவிட்டனர். இந்த பிக் பிக்சர்ஸ்தான் கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், ராவணன் படத்துக்கு விநியோகஸ்தர்கள்.
எனவே, உலகெங்கும் ராவணன் அல்லது ராவண் அல்லது வில்லன் வெளியாகும்போது, கேரளாவில் மட்டும் இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் ரிலீஸாக முடியும். அதுவும், ரெட் கார்டு விலக்கிக் கொள்ளப்பட்டால்!
அடுத்து கர்நாடக சிக்கல்...
இங்கு பிற மொழிப் படங்களை மொத்தம் 45 தியேட்டர்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.
அதன்படி ராவணனுக்கு 45 தியேட்டர்களைத் தந்துள்ளது கர்நாடக திரைத்துறை. ஆனால் மணிரத்னமும் அவர் மனைவியும், "இந்தப் படம் மூன்று மொழிப் படம். ராவண், ராவணன், வில்லன் ஆகிய மூன்று படங்களுக்குமே தனித் தனி சென்சார் சான்று, நெகடிவ்கள் உள்ளன. எனவே மூன்றுக்கும் சேர்த்து 135 தியேட்டர்கள் வேண்டும்" என்று பிலிம்சேம்பரில் கேட்டுப் பார்த்தனர். ஆனால் அசைந்து கொடுப்பதாக இல்லை கர்நாடக சினிமா நிர்வாகிகள்.
'எங்களைப் பொறுத்தவரை மூன்றும் ஒரே படம்தான். மணிரத்னம் இயக்கி, மெட்ராஸ் தயாரித்துள்ள ஒரு படம் இது. எனவே 45 தியேட்டர்களை ஒதுக்குகிறோம். உங்கள் இஷ்டப்படி மூன்று படங்களையும் திரையிட்டுக் கொள்ளுங்கள்.." என்று மடக்க, 'எந்திரனுக்கும் இப்படித்தான் செய்வீர்களா?' என்று சம்பந்தமே இல்லாமல் 'பற்ற வைத்துள்ளனர்'.
அந்தப் படம் வரும்போது பார்த்துக் கொள்கிறோம். உங்கள் படத்தைப் பற்றி மட்டும் பேசுங்கள் என்று அவர்கள் கண்டிப்பு காட்ட, வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
இப்போது ராவண் இந்திப் படத்தை 24 தியேட்டர்களிலும், ராவணன் தமிழ்ப் படத்தை 16 தியேட்டர்களிலும், வில்லன் தெலுங்குப் படத்தை 5 தியேட்டர்களிலும் திரையிடவுள்ளனராம்.
பெங்களூர் மல்டிப்ளெக்ஸ்களில் கட்டணம் எக்கச்சக்கம். சென்னையை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்குக்கும் மேல். அதிக தியேட்டர்களில் மூன்று மொழிகளிலும் வெளியிட்டு கலெக்ஷனை அள்ளும் பிக் பிக்சர்ஸ் மற்றும் சுஹாஸினி திட்டங்கள் இங்கும் எடுபடவில்லை!
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!