பாடல் கம்போசிங்கில் ரஜினிகாந்த் பங்கேற்பதற்கு காரணம் தெரியுமா... சுந்தர் சி சொன்ன சுவாரசிய தகவல்

சென்னை: இயக்குநர் சுந்தர் சி தற்சமயம் அன்பே வா திரைப்படம் பாணியில் காஃபி வித் காதல் என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

ரஜினி, கமல், அஜித் என்று மூவரையும் இயக்கிய இயக்குநர்களில் இவரும் ஒருவர்.

இவர் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த்தைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

அண்ணாமலை

அண்ணாமலை

சினிமா துறையே இளையராஜா பின்னால் சென்று கொண்டிருந்த காலக்கட்டத்தில் தனது தயாரிப்பில் உருவாக்கப்பட்ட மூன்று திரைப்படங்களுக்கு மூன்று வெவ்வேறு இசையமைப்பாளர்களை ஒப்பந்தம் செய்திருந்தார் இயக்குநர் கே. பாலச்சந்தர். அதில் ஒன்றுதான் நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை திரைப்படம். அந்தப் படத்திற்கு தேவா இசையமைத்து பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. அந்தப் படத்தில் தான் முதன்முறையாக ரஜினிகாந்தை கதை விவாதம், பாடல் கம்போசிங் என பிற துறைகளிலும் கலந்து கொள்ளுமாறு பாலச்சந்தர் அறிவுரை கூறினாராம். அதன் பின்னர், தான் நடித்த படங்களில் கதை விவாதம் பாடல் கம்போசிங் என்று பிற துறைகளிலும் தான் கலந்து கொண்டதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அருணாச்சலம்

அருணாச்சலம்

உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர்.சியை அழைத்த ரஜினிகாந்த் நான் அடுத்து ஒரு படம் நடிக்கப் போகிறேன் அதை நீங்கள் இயக்குகிறீர்களா என்று கேட்டாராம். அந்தச் சந்திப்பதில் இருந்ததால் தான் எந்த ஒரு கதாநாயகனிடமும் கதை சொல்ல சென்றதில்லை எனவும் என் மேல் நம்பிக்கை வைத்து யார் நடிக்க வருகிறார்கள் அவர்களைத்தான் இயக்கி வருகிறேன் என்றும் சுந்தர்சி கூறி உள்ளார்.

பாடல் கம்போஸிங்

பாடல் கம்போஸிங்

அருணாச்சலம் திரைப்படத்தின் பாடல் கம்போஸிங்கிலும் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பொதுவாக தன் படங்களில் அறிமுக பாடல் உட்பட அனைத்து பாடல்களையும் நேரடியாக கேட்டு வாங்கி கொள்வாராம் ரஜினிகாந்த். காரணம் ஃபாஸ்ட் பீட் பாடல்களை போட்டு கொடுத்து விட்டால் தன்னால் நடனம் ஆட முடியாது என்பதுதான் அதற்கு காரணமாம். இது நடிகர் ரஜினிகாந்த் பின்பற்றும் டெக்னிக் என்று சுந்தர் சி அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

ரஞ்சித் ராதிகா நேர்காணல்

ரஞ்சித் ராதிகா நேர்காணல்

கபாலி திரைப்படம் வெளிவந்த போது கூட நடிகை ராதிகா இயக்குனர் பா ரஞ்சித் அவர்களை ஒரு பேட்டி எடுத்திருப்பார். அதில் கூறும்போது கூட அழும் காட்சிகள் மற்றும் நடனமாடும் காட்சிகள் வந்தால் ரஜினி தவிர்த்து விடுவார் என்று ரஞ்சித் கூற போக ரஜினியுடன் பணி புரிந்த அனுபவத்தை வைத்து தனக்கும் அது தெரியும் என்றும் அழுகை காட்சியில் அழுது கொண்டே நடிப்பார் என்றும் ராதிகாவும் அந்த பேட்டியில் கூறியிருப்பார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X