Don't Miss!
- News சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில் வேகம் எடுக்கும் அதிமுக!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ரேணுகாவும், உம்மாவும்! கிளாமரில் கில்லி மாதிரி துள்ளித் திரிய ஆரம்பித்துள்ள ரேணுகா மேனன் ஒருகாலத்தில் கிளாமர் கிலோ எத்தனை என்று கேட்டு தயாரிப்பாளர்களையும்,இயக்குனர்களையும் அலற வைத்தவர்.கலாபக் காதலனில் ரேணுகாவின் கவர்ச்சி, எல்.ஓ.சியைத் தாண்டி எக்குத் தப்பாகஓடியதைப் பார்த்து மலையாளைத் திரையுலகினர் இன்னும் புலம்பிக் கொண்டுள்ளனர்.நம்மகிட்ட கடுப்படிச்சுட்டு தமிழ்ல மட்டும் தகதகக்கிறாரே என்று ரேணுகாவைவறுத்தெடுத்து வருகிறார்கள் மல்லுவுட்காரர்கள்.அவர்களது புலம்பலுக்கும் காரணம் இல்லாமல் இல்லை. 2 வருஷத்துக்கு முன்புமுதல் முறையாக சினிமாவில் நடிக்க வந்தபோது, மலையாளத்தில் ரேணுகா நடித்தபடம் மாய மோஹித சந்திரன். இதுதான் அவரது முதல் படம். குஞ்சாக்கோபோபன்தான் படத்தின் ஹீரோ. படத்தில் சில கிஸ்ஸிங் காட்சிகளும், ஹீரோவுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளும்இருந்தன. ஆனால் ரேணுகா மேனன் ரொம்ப நெர்வஸ்ஸாக இருந்ததால் முதல் நாளேஇத்தனைக்ை காட்சிகளையும் சொல்லி அவரை கலவரப்படுத்த வேண்டாம் என்றுசைவக் காட்சிகளை மட்டும் முதலில் சுட்டுத் தள்ளியுள்ளார்கள்.அட சினிமா உலகம் நல்லாத்தான் இருக்கு, ரொம்ப நல்லா எடுக்கிறாங்களே என்றுசேச்சிக்கு சந்தோஷம் பிறந்தது. இதுதான் சரியான சமயம் என்று முடிவு செய்தஇயக்குனர், உதவி இயக்குனர் மூலமாக ஒரு முத்தக் காட்சியைப் படமாக்கப்போவதாக தாக்கலைப் போட்டுள்ளார்.அதைக் கேட்டு விக்கித்துப் போனாராம் ரேணுகா. என்னது, முத்தக் காட்சியா, அடுத்த ஆம்பளையுடன், பப்ளிக்காக முத்தம் கொடுக்கவேண்டுமா, அப்படிக்கா எல்லாம் என்னால் நடிக்க முடியாது, நான் அப்படிப்பட்டபொண்ணு இல்லை என்று அலறிய ரேணுகா, தயாரிப்பாளரிடம் போய்இப்படியெல்லாம் நடிக்கச் சொல்றாங்க என்று புலம்பியுள்ளார்.ஆனால் இதெல்லாம் டைரக்டரோட முடிவும்மா, என்னால ஒண்ணும் பண்ண முடியாதுஎன்று தயாரிப்பாளர் கைவிட, இயக்குனரிடம் போய் முறையிட்டார் ரேணுகா.அவரும், காட்சிக்கு இது கண்டிப்பா தேவை என்று கூறி விட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் புலம்பிய ரேணுகா, பின்னர்மனதைத் திடப்படுத்திக் கொண்டு முத்தக் காட்சிக்கு ஓ.கே. சொன்னார். அந்தக்காட்சியை எடுத்து முடித்ததும், ஓவென்று கதறி அழுதாராம்.இதனால் ஹீரோ, இயக்குனர் உள்பட ஸ்பாட்டில் இருந்த அத்தனை பேரும் குழம்பிப்போனார்கள்.இதற்குப் போய் இத்தனை களேபரமா, சினிமான்னா இதெல்லாம் சகஜம்மா,கறையாதே பொண்ணு மோளே என்று அத்தனை பேரும் சமாதானம் சொன்ன பிறகேஅடங்கினாராம் ரேணுகா.அப்படிப்பட்ட ரேணுகாதான் இப்போது உட்டாலங்கடி கிரிகிரி கணக்காக கிளாமரில்பட்டைய கிளப்பி வருகிறார். இப்ப சொல்லுங்க, மலையாள இயக்குனர்கள்,தயாரிப்பாளர்களின் வயித்தெரிச்சல் நியாமானதுதானே!
கிளாமரில் கில்லி மாதிரி துள்ளித் திரிய ஆரம்பித்துள்ள ரேணுகா மேனன் ஒருகாலத்தில் கிளாமர் கிலோ எத்தனை என்று கேட்டு தயாரிப்பாளர்களையும்,இயக்குனர்களையும் அலற வைத்தவர்.
கலாபக் காதலனில் ரேணுகாவின் கவர்ச்சி, எல்.ஓ.சியைத் தாண்டி எக்குத் தப்பாகஓடியதைப் பார்த்து மலையாளைத் திரையுலகினர் இன்னும் புலம்பிக் கொண்டுள்ளனர்.நம்மகிட்ட கடுப்படிச்சுட்டு தமிழ்ல மட்டும் தகதகக்கிறாரே என்று ரேணுகாவைவறுத்தெடுத்து வருகிறார்கள் மல்லுவுட்காரர்கள்.
அவர்களது புலம்பலுக்கும் காரணம் இல்லாமல் இல்லை. 2 வருஷத்துக்கு முன்புமுதல் முறையாக சினிமாவில் நடிக்க வந்தபோது, மலையாளத்தில் ரேணுகா நடித்தபடம் மாய மோஹித சந்திரன். இதுதான் அவரது முதல் படம். குஞ்சாக்கோபோபன்தான் படத்தின் ஹீரோ.
படத்தில் சில கிஸ்ஸிங் காட்சிகளும், ஹீரோவுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளும்இருந்தன. ஆனால் ரேணுகா மேனன் ரொம்ப நெர்வஸ்ஸாக இருந்ததால் முதல் நாளேஇத்தனைக்ை காட்சிகளையும் சொல்லி அவரை கலவரப்படுத்த வேண்டாம் என்றுசைவக் காட்சிகளை மட்டும் முதலில் சுட்டுத் தள்ளியுள்ளார்கள்.
அட சினிமா உலகம் நல்லாத்தான் இருக்கு, ரொம்ப நல்லா எடுக்கிறாங்களே என்றுசேச்சிக்கு சந்தோஷம் பிறந்தது. இதுதான் சரியான சமயம் என்று முடிவு செய்தஇயக்குனர், உதவி இயக்குனர் மூலமாக ஒரு முத்தக் காட்சியைப் படமாக்கப்போவதாக தாக்கலைப் போட்டுள்ளார்.
அதைக் கேட்டு விக்கித்துப் போனாராம் ரேணுகா.
என்னது, முத்தக் காட்சியா, அடுத்த ஆம்பளையுடன், பப்ளிக்காக முத்தம் கொடுக்கவேண்டுமா, அப்படிக்கா எல்லாம் என்னால் நடிக்க முடியாது, நான் அப்படிப்பட்டபொண்ணு இல்லை என்று அலறிய ரேணுகா, தயாரிப்பாளரிடம் போய்இப்படியெல்லாம் நடிக்கச் சொல்றாங்க என்று புலம்பியுள்ளார்.
ஆனால் இதெல்லாம் டைரக்டரோட முடிவும்மா, என்னால ஒண்ணும் பண்ண முடியாதுஎன்று தயாரிப்பாளர் கைவிட, இயக்குனரிடம் போய் முறையிட்டார் ரேணுகா.அவரும், காட்சிக்கு இது கண்டிப்பா தேவை என்று கூறி விட்டார்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் புலம்பிய ரேணுகா, பின்னர்மனதைத் திடப்படுத்திக் கொண்டு முத்தக் காட்சிக்கு ஓ.கே. சொன்னார். அந்தக்காட்சியை எடுத்து முடித்ததும், ஓவென்று கதறி அழுதாராம்.
இதனால் ஹீரோ, இயக்குனர் உள்பட ஸ்பாட்டில் இருந்த அத்தனை பேரும் குழம்பிப்போனார்கள்.
இதற்குப் போய் இத்தனை களேபரமா, சினிமான்னா இதெல்லாம் சகஜம்மா,கறையாதே பொண்ணு மோளே என்று அத்தனை பேரும் சமாதானம் சொன்ன பிறகேஅடங்கினாராம் ரேணுகா.
அப்படிப்பட்ட ரேணுகாதான் இப்போது உட்டாலங்கடி கிரிகிரி கணக்காக கிளாமரில்பட்டைய கிளப்பி வருகிறார். இப்ப சொல்லுங்க, மலையாள இயக்குனர்கள்,தயாரிப்பாளர்களின் வயித்தெரிச்சல் நியாமானதுதானே!