Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஸ்பெஷல்ஸ்
ஆந்திர அரசியலில் குதித்து விடலாமா என்ற தீவிர யோசனையில் இருக்கிறார் நடிகை ரோஜா.
சிம்ரனைப் போலவே ஏகப்பட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் ரோஜா என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கிடக்கிறார். செக் மோசடிவழக்கு முடிவது போலத் தெரியவில்லை, இழுத்துக் கொண்டே போகிறது.
இது போதாதென்று எந்தப் புதிய படத்தில் புக் ஆனாலும் அந்த சம்பளத்தை கோர்ட் மூலம் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை வேறு அவரை புதிய படங்களில் ஒப்பந்தமாக விடாமல் தடுக்கிறது.
காதலித்து வந்த ஆர்.கே.செல்வமணியும் கடுப்படித்து விட்டதால் வெறுப்புடன் இருக்கிறார். புதிதாக கிடைத்த காதலரும் வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு போகப் போகிறாராம்.
சமீபத்தில் கோர்ட் உத்தரவுப்படி மன நலக் காப்பகத்திற்குச் சென்ற ரோஜா ஒரு நாளை அங்கு செலவிட்டார். மனதில்சுத்தமாக மகிழ்ச்சியே இல்லையாம்.
இத்தனை தொந்தரவுகளால் வெறுத்துப் போயுள்ள ரோஜாவுக்கு, ஆந்திர தேசத்தைச் சேர்ந்த ஒருவர் யோசனை கூறியுள்ளாராம்.
பேசாமல் ஆந்திர அரசியலில் சேர்ந்து விடு, ஏதாவது ஒரு முக்கியக் கட்சியில் சேர்ந்து, எம்.பி. பதவியோ அல்லது வேறு பதவியோ வாங்கி விடு, அதுதான் உனது பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு என்று அவர் கூறியதை கவனத்துடன் கேட்டுக் கொண்டாராம் ரோஜா.
இதையடுத்து தெலுங்கு தேசத்தில் சேர ரோஜா முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசத்தின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவைக்கூட பார்த்து பேசி விட்டதாக சொல்கிறார்கள்.
விரைவில் கட்சியில் சேரும் அறிவிப்பு வெளியாகலாம்.