Don't Miss!
- News செந்தில் பாலாஜி சிறைவாசத்திற்கு இல்லை என்ட்? 25ம் தேதிவரை.. இன்று நீதிமன்ற காவல் விதித்த நீதிமன்றம்
- Automobiles தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..
- Sports IPL 2024 : பால்கனி அறை சர்ச்சை.. சிஎஸ்கே அணியில் நடந்தது என்ன? உண்மையை சொன்ன சின்ன தல சுரேஷ் ரெய்னா!
- Finance இனி கழுதை வளர்த்தே பொழச்சிக்கலாம் போலயே..கழுதை பால் ஒரு லிட்டர் இவளோவா?
- Technology Google Pay கதை க்ளோஸ்.. மொத்த இந்தியர்களுக்கும் வந்தது Google Wallet ஆப்.. இனி எல்லாமே இதுல தான் பண்ணனும்!
- Lifestyle ஒரு மணி நேர இடைவெளியில் 6 குழந்தைகள் பெற்றெடுத்த பாகிஸ்தான் பெண்... அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
படமாகிறது சானியா கல்யாணா கலாட்டா- சானியா கடும் எதிர்ப்பு
பாலிவுட்டைச் சேர்ந்த பிடி கார்க் என்பவர் இப்படத்தைத் தயாரிக்கிறார். ஜெய்பிரகாஷ் என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு ஹைதராபாத் தமாத் எனப் பெயரிட்டுள்ளனர். கடந்த வாரம் இப்படத்தின் பூஜை நடந்தது.
சானியா கேரக்டரில் டிவி நடிகையான தேபினா பானர்ஜி நடிக்கிறாராம். இவர் தவிர அமர் உபாத்யாய், அலி மெர்ச்சன்ட் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.
சானியா, சோயப் மாலிக் திருணத்தையொட்டி நடந்த சர்ச்சைகள்தான் படத்தின் மையக் கருவாம். மேலும், சோரப் மிர்ஸாவுடனானசானியாவின் திருமண நிச்சயதார்த்தம் முறிந்ததற்கான காரணத்தையும் இப்படம் அலசவுள்ளதாம்.
இந்தப் படம் சானியாவை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்தப் படம் குறித்து தன்னிடம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் முன்பே தெரிவிக்கவில்லை, அனுமதி பெறவில்லை என்று சானியா கூறியுள்ளார்.
இதுகுறித்து சானியா கூறுகையில், செய்தித்தாள்களில் படித்துதான் இதுகுறித்து தெரிந்து கொண்டேன். எனது திருமணத்தை அடிப்படையாகக் கொண்டு சினிமாப் படம் எடுப்பது தேவையற்றது, பொருத்தமற்றது.
இது தனது கற்பனைப் படம் என்பதை சம்பந்தப்பட்ட இயக்குநர் விளக்குவார் என நம்புகிறேன். என்னிடம் இதுகுறித்து எதுவும் கேட்கப்படாதது கோபத்தை ஏற்படுத்துகிறது. உண்மையான சானியா மிர்ஸா குறித்து ஒரு சிலருக்குத்தான் தெரியும்.
மீடியாக்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் இந்த இயக்குநர் தனது படத்தை இயக்குவார் என்றால் அது பெரும் கேலிக்கூத்தாகவே இருக்கும் என்றார்.