Don't Miss!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சானியா நோ: சிம்புவுக்கு மூக்குடைப்பு ஒரு வழியாக சிம்புவின் முயற்சிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார் சானியா மிர்ஸா.இந்தியர்களை கிரிக்கெட் ஜூரத்திலிருந்து மீட்டுக் காப்பாற்றி டென்னிஸ் பக்கம் திரும்ப வைத்திருக்கும் இந்த இளம் டென்னிஸ்புயலை சினிமாவுக்கு இழுக்க நிறையப் பேர் பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.ஹைதராபாத்தைச் சேர்ந்த சானியாவை சினிமாவுக்கு இழுக்க அந்த ஊர் ஆந்திராவாலா நடிகர்களும், இயக்குனர்களும்,தயாரிப்பாளர்களும் பல கோடிகளுக்கான செக்குகளுடன் அவரை மொய்த்து வருகின்றனர்.அதே போல அவரை இந்திக்கு இழுக்கவும் கூலிங் கிளாஸ், கிளீன் ஷேவ், அரை நிர்வாண இந்தி நடிகர்களும் முயற்சித்துவருகின்றனர்.இவர்ளோடு நம்ம ஊர் சிலம்பரசனும் கோதாவில் குதித்தார். தனது வல்லவன் படத்தில் சானியாவை நடிக்க வைக்க முயன்றுவந்தார். மற்றவர்களைவிட ஒரு கோடி அதிகமாகவே தருவதாக (தயாரிப்பாளர்களிடம் வாங்கித் தான்) சானியாவுக்கு தூதுவிட்டுப் பார்த்தார்.இது தொடர்பாக நம் ஊர் பத்திரிக்கைகள், டிவிக்கள் தவிர ஆந்திர மீடியாக்களிலும் பேசி வந்தார் சிம்பு.சிம்பு தனது ஆசையை லேசாக கூறி விட்டாலும், சானியாவை நெருங்கவே அவருக்கு ரொம்ப காலம் பிடித்து விட்டதாம். ஒருவழியாக சானியாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து அவரிடம் தனது வருகை குறித்துப் பேசியுள்ளார் சிம்பு.சினிமாவில் நடிக்குமாறு கேட்கவே சிம்பு வந்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்ட சானியா, எனக்கு சினிமாவில் நடிக்கஆசையே இல்லை, டென்னிஸ் மட்டுமே இப்போதைக்கு எனது ஒரே நோக்கம் என்று முதலிலேயே கூறி விட்டார்.இருந்தும் மனம் தளராத சிம்பு, வல்லவன் படத்தின் கதையை விரிவாகக் கூறி, சானியாவின் ரோலையும் விளக்கியுள்ளார்.அவர் பேசியதை மிகவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட சானியா, உங்களோட நம்பிக்கைக்கு நன்றி, இருந்தாலும் நான்நடிப்பதாக இல்லை. அப்படி ஒரு எண்ணம் வந்தால் நிச்சயம் உங்களைப் பரிசீலிப்பேன் என்று கூறி அன்போடு அனுப்பி வைத்துவிட்டாராம்.சானியா கிடைக்காத சோகம் ஒருபக்கம் இருந்தாலும், எண்ணம் வந்தால் உங்களையும் பரிசீலிப்பேன் என்று சானியாகூறியிருப்பதால் தெம்போடு சென்னை திரும்பினாராம் சிம்பு.சானியா நடிக்க மறுத்த ரோலில்தான் காதல் சந்தியா நடித்து வருகிறார் என்கிறார்கள். சினிமாவில் மட்டும்தான் நடிக்க மறுக்கிறார் சானியா. அதேசமயம் விளம்பரப் பட வாய்ப்புகள் வந்தால் ஒத்துக் கொள்கிறாராம்.அதுவும் கூட, தனது டென்னிஸ் சாதனைப் பயணத்திற்குத் தேவைப்படும் பணத்திற்காகத்தான் என்கிறார்.
ஒரு வழியாக சிம்புவின் முயற்சிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார் சானியா மிர்ஸா.
இந்தியர்களை கிரிக்கெட் ஜூரத்திலிருந்து மீட்டுக் காப்பாற்றி டென்னிஸ் பக்கம் திரும்ப வைத்திருக்கும் இந்த இளம் டென்னிஸ்புயலை சினிமாவுக்கு இழுக்க நிறையப் பேர் பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த சானியாவை சினிமாவுக்கு இழுக்க அந்த ஊர் ஆந்திராவாலா நடிகர்களும், இயக்குனர்களும்,தயாரிப்பாளர்களும் பல கோடிகளுக்கான செக்குகளுடன் அவரை மொய்த்து வருகின்றனர்.
அதே போல அவரை இந்திக்கு இழுக்கவும் கூலிங் கிளாஸ், கிளீன் ஷேவ், அரை நிர்வாண இந்தி நடிகர்களும் முயற்சித்துவருகின்றனர்.
இவர்ளோடு நம்ம ஊர் சிலம்பரசனும் கோதாவில் குதித்தார். தனது வல்லவன் படத்தில் சானியாவை நடிக்க வைக்க முயன்றுவந்தார். மற்றவர்களைவிட ஒரு கோடி அதிகமாகவே தருவதாக (தயாரிப்பாளர்களிடம் வாங்கித் தான்) சானியாவுக்கு தூதுவிட்டுப் பார்த்தார்.
இது தொடர்பாக நம் ஊர் பத்திரிக்கைகள், டிவிக்கள் தவிர ஆந்திர மீடியாக்களிலும் பேசி வந்தார் சிம்பு.
சிம்பு தனது ஆசையை லேசாக கூறி விட்டாலும், சானியாவை நெருங்கவே அவருக்கு ரொம்ப காலம் பிடித்து விட்டதாம். ஒருவழியாக சானியாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து அவரிடம் தனது வருகை குறித்துப் பேசியுள்ளார் சிம்பு.
சினிமாவில் நடிக்குமாறு கேட்கவே சிம்பு வந்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்ட சானியா, எனக்கு சினிமாவில் நடிக்கஆசையே இல்லை, டென்னிஸ் மட்டுமே இப்போதைக்கு எனது ஒரே நோக்கம் என்று முதலிலேயே கூறி விட்டார்.
இருந்தும் மனம் தளராத சிம்பு, வல்லவன் படத்தின் கதையை விரிவாகக் கூறி, சானியாவின் ரோலையும் விளக்கியுள்ளார்.
அவர் பேசியதை மிகவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட சானியா, உங்களோட நம்பிக்கைக்கு நன்றி, இருந்தாலும் நான்நடிப்பதாக இல்லை. அப்படி ஒரு எண்ணம் வந்தால் நிச்சயம் உங்களைப் பரிசீலிப்பேன் என்று கூறி அன்போடு அனுப்பி வைத்துவிட்டாராம்.
சானியா கிடைக்காத சோகம் ஒருபக்கம் இருந்தாலும், எண்ணம் வந்தால் உங்களையும் பரிசீலிப்பேன் என்று சானியாகூறியிருப்பதால் தெம்போடு சென்னை திரும்பினாராம் சிம்பு.
சானியா நடிக்க மறுத்த ரோலில்தான் காதல் சந்தியா நடித்து வருகிறார் என்கிறார்கள்.
சினிமாவில் மட்டும்தான் நடிக்க மறுக்கிறார் சானியா. அதேசமயம் விளம்பரப் பட வாய்ப்புகள் வந்தால் ஒத்துக் கொள்கிறாராம்.அதுவும் கூட, தனது டென்னிஸ் சாதனைப் பயணத்திற்குத் தேவைப்படும் பணத்திற்காகத்தான் என்கிறார்.
-
அடேங்கப்பா.. ஷங்கர் மகள் திருமணத்தில் அஜித் மகள் எப்படி அழகா இருக்காரு பாருங்க.. செம பிக்ஸ்!
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
-
கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!