சரிதாவின் ஆட்டம் கோடம்பாக்கத்தில் கேரளத்துக்கு புது எண்ட்ரீகளில் இன்றைய தேதிக்கு இன்னொருத்தரையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர் பெயர் சரிதா தாஸ்.ஆட்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பிள்ளையார் சுழி போடுகிறது இந்த பாப்பா.கேரளாவில் ஸ்கூலில் படிக்கும்போதே கனவில் கோடம்பாக்கம் வந்து வந்து போச்சாம். இதனால் ஸ்கூலுக்குகடுக்காய் கொடுத்துவிட்டு சென்னை வந்திறங்கிவிட்டார் சரிதா தாஸ்.நாட்டியம் எல்லாம் கற்று சினிமாவுக்காக தன்னை ரொம்ப நாளாகவே தயார் படுத்திக் கொண்டு இருந்தாராம்.மீடியேட்டர்களைப் பிடித்து கோடம்பாக்கத்தில் குடும்பத்தோடு வந்து சான்ஸ் தேடியதன் பலனாக ஆட்டம் படவாய்ப்பு கிடைத்துள்ளது.காந்தலட்சுமி கிரியேசன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஷாரூக் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். வில்லனுக்குசரியான முகம்.. ஆனால் ஹீரோ தான் ஆவேன் என்று சுண்டு விரலில் நின்று பிடிவாதம் பிடித்து சான்ஸையும்வாங்கிவிட்டார்.படத்தில் விஜி கிட்டி, சபீதா ஆனந்த் என ஏகப்பட்ட மலையாள முகங்களும் உண்டு. ஹீரோவுக்கும் கேரளாபக்கம் தானாம். கேட்டால் சொல்ல மறுக்கிறார்கள்.பவன் நாராயணா என்ற புதுமுகம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தெலுங்கில் முன்னணியில் இருந்தமியூசிக் டைரக்டர் கோட்டியின் உறவினராம் இவர்.கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குவது அய்யனார் என்ற புகுமுக இயக்குனர்.முதல் கட்ட படப்பிடிப்பை நாகர்கோவில் பக்கம் நடத்தி முடித்துவிட்டார்கள். இப்போது சென்னையில் செட்போட்டு மிச்சத்தை சுட்டு வருகிறார்கள்.பாடல் காட்சிகளுக்கு மலேசியா, கோவா, விசாகப்பட்டிணத்துக்குப் போக இருக்கிறார்களாம்.சரிதா தாசுக்கு நல்ல களையான முகம், எக்ஸ்பிரஸன்சும் இயல்பாகவே வருகிறது. இதனால் கவர்ச்சி காட்டப்போறேன், கிளாமராலே வூடு கட்டப் போறேன் என்றெல்லாம் சொல்லாமல் நல்லா நடிக்கனும்.. நல்ல ஆர்டிஸ்னுபேர் வாங்கனும் என்று மலையாளத்தில் சொன்னார்.அப்படியே தமிழும் கற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டாராம். ரொம்ப நல்ல விஷயம்ம்மா.. தம்பி ஷாரூக் தான் ஹீரோ கேரக்டரில் ரொம்பவே இடிக்கிறார். தனுஷையே ஹீரோவாக ஏத்துக் கொண்டவர்கள்அல்லவா நாம்.. அந்த நம்பிக்கையில் கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார் போல.நம்பிக்கை தானே வாழ்க்கைங்கிறேன்..

By Staff

கோடம்பாக்கத்தில் கேரளத்துக்கு புது எண்ட்ரீகளில் இன்றைய தேதிக்கு இன்னொருத்தரையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர் பெயர் சரிதா தாஸ்.

ஆட்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பிள்ளையார் சுழி போடுகிறது இந்த பாப்பா.

கேரளாவில் ஸ்கூலில் படிக்கும்போதே கனவில் கோடம்பாக்கம் வந்து வந்து போச்சாம். இதனால் ஸ்கூலுக்குகடுக்காய் கொடுத்துவிட்டு சென்னை வந்திறங்கிவிட்டார் சரிதா தாஸ்.

நாட்டியம் எல்லாம் கற்று சினிமாவுக்காக தன்னை ரொம்ப நாளாகவே தயார் படுத்திக் கொண்டு இருந்தாராம்.மீடியேட்டர்களைப் பிடித்து கோடம்பாக்கத்தில் குடும்பத்தோடு வந்து சான்ஸ் தேடியதன் பலனாக ஆட்டம் படவாய்ப்பு கிடைத்துள்ளது.


காந்தலட்சுமி கிரியேசன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஷாரூக் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். வில்லனுக்குசரியான முகம்.. ஆனால் ஹீரோ தான் ஆவேன் என்று சுண்டு விரலில் நின்று பிடிவாதம் பிடித்து சான்ஸையும்வாங்கிவிட்டார்.

படத்தில் விஜி கிட்டி, சபீதா ஆனந்த் என ஏகப்பட்ட மலையாள முகங்களும் உண்டு. ஹீரோவுக்கும் கேரளாபக்கம் தானாம். கேட்டால் சொல்ல மறுக்கிறார்கள்.

பவன் நாராயணா என்ற புதுமுகம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தெலுங்கில் முன்னணியில் இருந்தமியூசிக் டைரக்டர் கோட்டியின் உறவினராம் இவர்.

கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குவது அய்யனார் என்ற புகுமுக இயக்குனர்.


முதல் கட்ட படப்பிடிப்பை நாகர்கோவில் பக்கம் நடத்தி முடித்துவிட்டார்கள். இப்போது சென்னையில் செட்போட்டு மிச்சத்தை சுட்டு வருகிறார்கள்.

பாடல் காட்சிகளுக்கு மலேசியா, கோவா, விசாகப்பட்டிணத்துக்குப் போக இருக்கிறார்களாம்.

சரிதா தாசுக்கு நல்ல களையான முகம், எக்ஸ்பிரஸன்சும் இயல்பாகவே வருகிறது. இதனால் கவர்ச்சி காட்டப்போறேன், கிளாமராலே வூடு கட்டப் போறேன் என்றெல்லாம் சொல்லாமல் நல்லா நடிக்கனும்.. நல்ல ஆர்டிஸ்னுபேர் வாங்கனும் என்று மலையாளத்தில் சொன்னார்.

அப்படியே தமிழும் கற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டாராம். ரொம்ப நல்ல விஷயம்ம்மா..


தம்பி ஷாரூக் தான் ஹீரோ கேரக்டரில் ரொம்பவே இடிக்கிறார். தனுஷையே ஹீரோவாக ஏத்துக் கொண்டவர்கள்அல்லவா நாம்.. அந்த நம்பிக்கையில் கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார் போல.

நம்பிக்கை தானே வாழ்க்கைங்கிறேன்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X