Don't Miss!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவக் கொலை! கணவரின் இறப்பால் சோகம்! கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி தற்கொலை!
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கேள்க்காத சப்தம்
வசந்த் இயக்கத்தில் தமிழில் உருவாகியுள்ள சத்தம் போடாதே படம் மலையாளத்தில் கேள்க்காத சப்தம் என்ற பெயரில் டப் ஆகியுள்ளது.
வசந்த் இயக்கத்தில் பிருத்விராஜ், பத்மப்ரியா ஆகியோர் நடித்துள்ள சத்தம் போடாதே படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நாசரும் முக்கிய வேடம் பூண்டு நடித்துள்ளார்.இது ஒரு குடும்பப் படம். அதேசமயம், திரில்லரும் கூட என்று வசந்த் கூறியுள்ளார். புதுசாக கல்யாணம் கட்டிக் கொண்டு வரும் பெண், அந்தக் குடும்பத்திற்குள் நிகழும் வன்முறைச் சம்பவங்களை சந்திக்கிறார், அதை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதையாம்.
இப்போது இப்படத்தை மலையாளத்துக்கும் கொண்டு போயுள்ளார் வசந்த். மலையாளத்தில் கபூர் மனலோடி, உமாதேவி ஆகியோர் திவ்யா பிலிம்ஸுக்காக தயாரித்துள்ளனர்.
மலையாளத்துக்குப் போகும் முதலாவது யுவன் ஷங்கர் ராஜா படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இசைஞானி மலையாளத்தில் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். இப்போது தந்தை வழியில் மகனும் மலையாளத்தைக் கலக்கப் போகிறார்.
கேள்க்காத சப்தத்திற்காக பிரபல பாடலாசிரியர் கிரீஷ் புட்டஞ்சேரி 6 பாடல்களை எழுதியுள்ளார். இவர் இசைஞானிக்கும் ராசியான பாடலாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு மொழிகளிலும் இப்படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார் வசந்த்.