Don't Miss!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- News மத்திய சென்னையில் ஒரு லட்சம் வாக்குகளை திமுக நீக்கிவிட்டது.. பாஜக வினோஜ் செல்வம் பகீர் குற்றச்சாட்டு
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
குண்டூரில் நடிகை சாவித்திரிக்கு வெண்கல சிலை!
தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தவர் மறைந்த நடிகை சாவித்திரி. நடிகைகள் பலரும் தங்களின் ஆதர்ச நாயகியாக இவரைத்தான் கூறுவார்கள். நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.
நடிகர்களில் சிவாஜிக்கு நிகரான அந்தஸ்து இவருக்கு தரப்படுகிறது. சாவித்திரியை பெருமைப்படுத்தும் வகையில் ஆந்திர மாநிலம் குண்டூரில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
அந்த சிலையை பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரும் தெலுங்கு நடிகருமான கிருஷ்ணம் ராஜு திறந்து வைத்தார்.
ராதிகாவுக்கு சாவித்ரி விருது
கலாதர்பார் கலாசார அமைப்பின் சார்பில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது. அந்த அமைப்பின் சார்பில் சாவித்திரி பெயரில் வழங்கப்படும் விருதுக்கு இந்த ஆண்டு நடிகை ராதிகா தேர்ந்து எடுக்கப்பட்டிருந்தார்.
விழாவில் ராதிகாவுக்கு, சாவித்திரி விருதை கிருஷ்ணம் ராஜு வழங்கினார்.
நடிகை வாணிஸ்ரீ, சாவித்ரியின் மகள் விஜயசாமுண்டீஸ்வர், பாஜக தலைவர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.