twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குண்டூரில் நடிகை சாவித்திரிக்கு வெண்கல சிலை!

    By Shankar
    |

    தமிழ் - தெலுங்கு சினிமா நடிகைகளில் சாதனையாளராகக் கருதப்படும் சாவித்ரிக்கு ஆந்திராவில் வெண்கலச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

    தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தவர் மறைந்த நடிகை சாவித்திரி. நடிகைகள் பலரும் தங்களின் ஆதர்ச நாயகியாக இவரைத்தான் கூறுவார்கள். நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.

    நடிகர்களில் சிவாஜிக்கு நிகரான அந்தஸ்து இவருக்கு தரப்படுகிறது. சாவித்திரியை பெருமைப்படுத்தும் வகையில் ஆந்திர மாநிலம் குண்டூரில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

    அந்த சிலையை பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரும் தெலுங்கு நடிகருமான கிருஷ்ணம் ராஜு திறந்து வைத்தார்.

    ராதிகாவுக்கு சாவித்ரி விருது

    கலாதர்பார் கலாசார அமைப்பின் சார்பில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது. அந்த அமைப்பின் சார்பில் சாவித்திரி பெயரில் வழங்கப்படும் விருதுக்கு இந்த ஆண்டு நடிகை ராதிகா தேர்ந்து எடுக்கப்பட்டிருந்தார்.

    விழாவில் ராதிகாவுக்கு, சாவித்திரி விருதை கிருஷ்ணம் ராஜு வழங்கினார்.

    நடிகை வாணிஸ்ரீ, சாவித்ரியின் மகள் விஜயசாமுண்டீஸ்வர், பாஜக தலைவர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

    English summary
    Former Union Minister and film actor U Krishnam Raju unveiled the life size-bronze statue of Telugu film actress late Savitri at Naaz centre, here today. Speaking on the occasion, he said Savitri was his roll model and she was versatile actress who acted in Telugu, Tamil and Kannada films. Tamil actress Vanisri , BJP Senior Leader M Venkaiah Naidu, Savitri’s daughter Vijaya Chamundeswari Devi, Congress Leader Mandali Buddha Prasad, Savitri Kalaparishat President Paruchuri Vijayalakshmi and host of prominent persons attended the programme.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X