Don't Miss!
- News லோக்சபா 2ம் கட்ட தேர்தல்: 13 மாநிலம் 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் லிஸ்ட்
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
குண்டூரில் நடிகை சாவித்திரிக்கு வெண்கல சிலை!
தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தவர் மறைந்த நடிகை சாவித்திரி. நடிகைகள் பலரும் தங்களின் ஆதர்ச நாயகியாக இவரைத்தான் கூறுவார்கள். நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.
நடிகர்களில் சிவாஜிக்கு நிகரான அந்தஸ்து இவருக்கு தரப்படுகிறது. சாவித்திரியை பெருமைப்படுத்தும் வகையில் ஆந்திர மாநிலம் குண்டூரில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
அந்த சிலையை பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரும் தெலுங்கு நடிகருமான கிருஷ்ணம் ராஜு திறந்து வைத்தார்.
ராதிகாவுக்கு சாவித்ரி விருது
கலாதர்பார் கலாசார அமைப்பின் சார்பில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது. அந்த அமைப்பின் சார்பில் சாவித்திரி பெயரில் வழங்கப்படும் விருதுக்கு இந்த ஆண்டு நடிகை ராதிகா தேர்ந்து எடுக்கப்பட்டிருந்தார்.
விழாவில் ராதிகாவுக்கு, சாவித்திரி விருதை கிருஷ்ணம் ராஜு வழங்கினார்.
நடிகை வாணிஸ்ரீ, சாவித்ரியின் மகள் விஜயசாமுண்டீஸ்வர், பாஜக தலைவர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.