Don't Miss!
- News இந்தியக் குடியுரிமையைப் போராடிப் பெற்ற பெண்! நிஜத்தில் ஒரு ‘சர்க்கார்’ நாயகி!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஷாருக்கை மிரட்டும் 'அண்டர்வோர்ல்ட் தாதா'!!
சமீபத்தில் வெளியான அவரது ஓம் ஷாந்தி ஓம் மிகப் பெரிய வெற்றியடைந்துள்ள நிலையில் பண்டி பாண்டே என்ற தாதாவிடம் இருந்து அவருக்கு இந்த பண மிரட்டல் வந்துள்ளது.
மும்பை திரையுலகினர், ரியல் எஸ்டேட் அதிபர்கள், தொழில்துறையினரை மிரட்டி பணம் பறித்து வரும் தாவுத் இப்ராகிம், சோட்டா ராஜன் வரிசையில் இந்த பண்டி பாண்டேவும் மிகவும் பிரபலம்.
ஷாருக்குக்கு கடந்த ஒரு வாரத்தில் பல முறை பண்டியிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துவிட்டனவாம். மேலும் 6 குண்டர்களையும் நேரில் அனுப்பியும் ரூ. 2 கோடி கேட்டு ஷாருக்கை மிரட்டியுள்ளான் பண்டி. இதையடுத்து தீவிரவாதத் தடுப்பு போலீசாரிடம் நேரில் புகார் அளித்துள்ளார் ஷாருக்.
ஆனால், இதை ரகசியமாக வைக்குமாறு ஷாருக் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. இதனால், ஷாருக் தங்களிடம் எந்தப் புகாரும் தரவில்லை. அவருக்கு எந்த மிரட்டலும் வரவில்லை என மும்பை போலீசார் கூறுகின்றனர்.
அதே போல ஷாருக்கும் இது குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனாலும் ரகசிய விசாரணை ஆரம்பித்துவிட்டது.
இந்த பண்டி பாண்டே முன்பு சோட்டா ராஜனின் கையாளாக இருந்தவன். பின்னர் அந்தக் கும்பலில் இருந்து பரத் நேபாளி, அஜய் மொகிதே ஆகியோருடன் பிரிந்து வந்து தனி கேங்கை உருவாக்கினான்.
அண்டர்வோர்ல்ட் தாதாக்களால் பணம் கேட்டு ஷாருக் மிரட்டப்படுவது இது முதல் முறையல்ல. தில் தோ பாகல் ஹை படம் ரிலீஸ் ஆன சமயத்தில் அபு சலேம் கும்பல் ஷாருக்கை மிரட்டி தங்களது பினாமி தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கச் ெசான்னது. ஆனால், அதில் நடிக்க ஷாருக் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.