Don't Miss!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஷாருக்கை மிரட்டும் 'அண்டர்வோர்ல்ட் தாதா'!!
சமீபத்தில் வெளியான அவரது ஓம் ஷாந்தி ஓம் மிகப் பெரிய வெற்றியடைந்துள்ள நிலையில் பண்டி பாண்டே என்ற தாதாவிடம் இருந்து அவருக்கு இந்த பண மிரட்டல் வந்துள்ளது.
மும்பை திரையுலகினர், ரியல் எஸ்டேட் அதிபர்கள், தொழில்துறையினரை மிரட்டி பணம் பறித்து வரும் தாவுத் இப்ராகிம், சோட்டா ராஜன் வரிசையில் இந்த பண்டி பாண்டேவும் மிகவும் பிரபலம்.
ஷாருக்குக்கு கடந்த ஒரு வாரத்தில் பல முறை பண்டியிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துவிட்டனவாம். மேலும் 6 குண்டர்களையும் நேரில் அனுப்பியும் ரூ. 2 கோடி கேட்டு ஷாருக்கை மிரட்டியுள்ளான் பண்டி. இதையடுத்து தீவிரவாதத் தடுப்பு போலீசாரிடம் நேரில் புகார் அளித்துள்ளார் ஷாருக்.
ஆனால், இதை ரகசியமாக வைக்குமாறு ஷாருக் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. இதனால், ஷாருக் தங்களிடம் எந்தப் புகாரும் தரவில்லை. அவருக்கு எந்த மிரட்டலும் வரவில்லை என மும்பை போலீசார் கூறுகின்றனர்.
அதே போல ஷாருக்கும் இது குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனாலும் ரகசிய விசாரணை ஆரம்பித்துவிட்டது.
இந்த பண்டி பாண்டே முன்பு சோட்டா ராஜனின் கையாளாக இருந்தவன். பின்னர் அந்தக் கும்பலில் இருந்து பரத் நேபாளி, அஜய் மொகிதே ஆகியோருடன் பிரிந்து வந்து தனி கேங்கை உருவாக்கினான்.
அண்டர்வோர்ல்ட் தாதாக்களால் பணம் கேட்டு ஷாருக் மிரட்டப்படுவது இது முதல் முறையல்ல. தில் தோ பாகல் ஹை படம் ரிலீஸ் ஆன சமயத்தில் அபு சலேம் கும்பல் ஷாருக்கை மிரட்டி தங்களது பினாமி தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கச் ெசான்னது. ஆனால், அதில் நடிக்க ஷாருக் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.