Don't Miss!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஷாமிலியை இழுக்கும் பாசில்! ஷாலினி பேபியாக இருந்தபோது அவரை நடிக்க வைத்து அறிமுகப்படுத்தியஇயக்குனர் பாசில் இப்போது ஷாலியினின் தங்கச்சி ஷாமிலியை ஹீரோயினாகஅறிமுகப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.ஷாலினி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியது பாசிலின் படம் மூலமாகத்தான்.தொடர்ந்து பாசிலின் பல மலையாளப் படங்களில் நடித்த ஷாலினி தமிழிலும்ஏராளமான படங்களில் சிறுமியாக நடித்தார்.பின்னர் குமரியான பிறகும், அவர் ஹீரோயினாக நடித்த முதல் படம் பாசிலின்மலையாளப் படமான அனியத்தி புறாவு. அது தமிழில் காதலுக்கு மரியாதை என்றபெயரில் தயாராகியபோது, அதிலும் ஷாலினிதான் நாயகி. தமிழில் அவர் நாயகியாகநடித்த முதல் படம் அதுதான்.அந்த அளவுக்கு ஷாலினியின் குடும்ப நண்பர் பாசில். ஷாலினி தொடர்ந்துநடிக்காமல் போனதில் ரொம்ப வருத்தப்பட்டவர் பாசில்தான்.இப்போது ஷாலினியின் தங்கை ஷாமிலியை ஹீரோயினாக்க அவர் முயற்சிமேற்கொண்டுள்ளார்.அக்கா வழியில் பல தமிழ்ப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாமிலி.அஞ்சலியில் ஷாமிலி, குட்டிக் குழந்தையாக கிளாசிக்காக நடித்து கண்களைக்குளமாக்கினார்.கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் கொஞ்சம் வளர்ந்த பெண்ணாகநடித்தவர், வயசுக்கு வந்ததும் அவர் நடிப்பை விட்டு விட்டு படிப்புக்குத்தாவிவிட்டார்.இப்போது கம்ப்யூட்டர் டிப்ளமோ படித்து வரும் ஷாமிலி நடிப்பில் சுத்தமாகவிருப்பம் இல்லாமல் இருக்கிறார்.பல மலையாளப் படத் தயாரிப்பாளர்களும், கோலிவுட்காரர்களும் நடிக்க வாங்கோ,வாங்கோ என்று அழைத்தும் மறுத்து விட்டார் ஷாமிலி.ஆனால் பாசில் வந்து நடிக்க கூப்பிட்டபோது அதற்கு என்ன பதில் சொல்வது என்றுதெரியவில்லை ஷாமிலிக்கு.எனது அடுத்த படத்தில் நீதான் ஹீரோயின். என்ன சொல்றே என்று ஷாமிலியிடம்கேட்டுள்ளார் பாசில். மற்றவர்களிடம் மறுத்ததைப் போல பாசிலிடம் பட்டென்று பேசமுடியவில்லையாம் ஷாமிலிக்கு.அய்யோ, இப்படிக் கேட்டுட்டீங்களே என்று தர்மசங்கடத்தில் நெளிந்தாராம் ஷாமிலி.அக்கா ஷாலினி, அத்தான் அஜீத், பெற்றோரிடம் பாசிலுக்கு என்ன பதில் சொல்வதுஎன்று கேட்டுள்ளார்.அது உன்பாடு, பாசில்பாடு என்று அத்தனை பேரும் நழுவி விட்டார்களாம்.பாசிலும் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறாராம். அவருடைய தொடர் முயற்சியின்விளைவாக ஷாமிலி நடிக்க ஒப்புக் கொள்வார் என்று மல்லுவுட்காரர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.அப்படி நடிக்க ஒத்துக் கொண்டால், எப்படியும் தமிழுக்குக் கொண்டு வந்து விடுவதுஎன மல்லுவேட்டிக்காரர்களும் (அதாங்க தமிழ் சினிமாக்காரவுக!) ரெடியாகஇருக்கிறார்கள்.இந்த மல்லுக்கட்டில் ஜெயிக்கப் போவது யாருன்னு தெரியலை!
ஷாலினி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியது பாசிலின் படம் மூலமாகத்தான்.தொடர்ந்து பாசிலின் பல மலையாளப் படங்களில் நடித்த ஷாலினி தமிழிலும்ஏராளமான படங்களில் சிறுமியாக நடித்தார்.
பின்னர் குமரியான பிறகும், அவர் ஹீரோயினாக நடித்த முதல் படம் பாசிலின்மலையாளப் படமான அனியத்தி புறாவு. அது தமிழில் காதலுக்கு மரியாதை என்றபெயரில் தயாராகியபோது, அதிலும் ஷாலினிதான் நாயகி. தமிழில் அவர் நாயகியாகநடித்த முதல் படம் அதுதான்.
இப்போது ஷாலினியின் தங்கை ஷாமிலியை ஹீரோயினாக்க அவர் முயற்சிமேற்கொண்டுள்ளார்.
அக்கா வழியில் பல தமிழ்ப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாமிலி.அஞ்சலியில் ஷாமிலி, குட்டிக் குழந்தையாக கிளாசிக்காக நடித்து கண்களைக்குளமாக்கினார்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் கொஞ்சம் வளர்ந்த பெண்ணாகநடித்தவர், வயசுக்கு வந்ததும் அவர் நடிப்பை விட்டு விட்டு படிப்புக்குத்தாவிவிட்டார்.
இப்போது கம்ப்யூட்டர் டிப்ளமோ படித்து வரும் ஷாமிலி நடிப்பில் சுத்தமாகவிருப்பம் இல்லாமல் இருக்கிறார்.
ஆனால் பாசில் வந்து நடிக்க கூப்பிட்டபோது அதற்கு என்ன பதில் சொல்வது என்றுதெரியவில்லை ஷாமிலிக்கு.
எனது அடுத்த படத்தில் நீதான் ஹீரோயின். என்ன சொல்றே என்று ஷாமிலியிடம்கேட்டுள்ளார் பாசில். மற்றவர்களிடம் மறுத்ததைப் போல பாசிலிடம் பட்டென்று பேசமுடியவில்லையாம் ஷாமிலிக்கு.
அய்யோ, இப்படிக் கேட்டுட்டீங்களே என்று தர்மசங்கடத்தில் நெளிந்தாராம் ஷாமிலி.அக்கா ஷாலினி, அத்தான் அஜீத், பெற்றோரிடம் பாசிலுக்கு என்ன பதில் சொல்வதுஎன்று கேட்டுள்ளார்.
பாசிலும் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறாராம். அவருடைய தொடர் முயற்சியின்விளைவாக ஷாமிலி நடிக்க ஒப்புக் கொள்வார் என்று மல்லுவுட்காரர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அப்படி நடிக்க ஒத்துக் கொண்டால், எப்படியும் தமிழுக்குக் கொண்டு வந்து விடுவதுஎன மல்லுவேட்டிக்காரர்களும் (அதாங்க தமிழ் சினிமாக்காரவுக!) ரெடியாகஇருக்கிறார்கள்.
இந்த மல்லுக்கட்டில் ஜெயிக்கப் போவது யாருன்னு தெரியலை!