Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சிவாஜி மீது காங்கிரஸ் திடீர் வழக்கு
சென்னை: சிவாஜி படத்தில் காங்கிரஸ் கட்சியை அவதூறாக சித்தரித்துள்ளதாக கூறி அப்படத்தைத் தடை செய்ய வேணடும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன்சிங்கின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிவாஜி படம் எடுக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் நன்கொடை கேப்பிடேசன் பணம் வாங்குவது குறித்து கூறுவதாக ஒரு காட்சி வருகிறது.
படத்தின் நாயகனான சாப்ட்வேர் என்ஜீனியர் ரஜினிகாந்த் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து, வில்லனான பல்கலைக் கழக வேந்தர் ஆதிகேசவனுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அப்போது சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருடைய படங்களுக்கு மத்தியில் அவர்கள் பேசுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் குற்றம் செய்யும் வில்லன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியினரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த காட்சி அமைந்துள்ளது.
இதனால் இந்த படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். அத்துடன் ரூ.50 கோடி நஷ்ட ஈடாக தர உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை செயலாளர், சென்சார் போர்டு, நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், இயக்குனர் ஷங்கர், தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த மனு நாளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.