Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
கல்யாணம் செய்யவில்லை - ஷோபனா
மறைந்த நாட்டியப் பேரொளி பத்மினியின் உறவுப் பெண்ணும், சிறந்த நடிகையும், டான்ஸருமான ஷோபனா, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
சமீபகாலமாக அவர் முழு மூச்சாக நடனத்தில் இறங்கி விட்டார். வயதைத் தாண்டியும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஷோபனா, இணையதளம் மூலம் தனக்குப் பிடித்த மாப்பிள்ளையைப் பார்த்துள்ளதாகவும், அவரைக் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.
டிசம்பரில் இந்தக் கல்யாணம் நடைபெறும் எனவும் அந்த செய்திகள் கூறின. ஆனால் அந்த செய்தியை ஷோபனா மறுத்துள்ளார்.
இதுகுறித்து ஷோபனா கூறுகையில், இது மும்பையைச் சேர்ந்த ஒரு பத்திரிகை கிளப்பி விட்டுள்ள வதந்தி செய்தி. நான் திருமணம் குறித்து இன்னும் தீர்மானிக்கவே இல்லை. அப்படி ஒரு வேளை திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் அதை மறைக்க வேண்டிய அவசியமோ, தயக்கமோ எனக்கு இல்லை.
எனது திருமணச் செய்தியைப் படித்து நான் மிகவும் மன வருத்தம் அடைந்தேன். மும்பைக்காரர்கள்தான் இப்படி வதந்தி கிளப்பி விடுகிறார்கள் என்றால் தமிழ் பத்திரிகைகளும் அதை பின்பற்ற வேண்டுமா?
எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகளை என்னிடம் கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னர் போடுங்கள், ப்ளீஸ் என்கிறார் ஷோபனா.