கெளதம் படத்தில் ஜோ-சிம்ஸ் குடும்ப வாழ்க்கையில் ஒரு ரவுண்டை வெற்றிகரமாக முடித்து விட்ட சிம்ரன்,திருமணத்திற்குப் பின்னர் தமிழ் சினிமாவில் ரெண்டாவது ரவுண்டுக்கு ரெடியாகிறார்.சரத்குமார் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க சிம்ஸ் புக் ஆகியுள்ளார்.தனது இடுப்பழகால் தமிழ் ரசிகர்களை கலக்கியெடுத்த சிம்ரன் அத்தனை முன்னணிநடிகர்களுடனும் நடித்து விட்டார். ரஜினி மட்டும்தான் பாக்கி என்ற நிலையில்திருமணமாகி சொந்த ஊருக்குப் போய் விட்டார்.இப்போது ஒரு குழந்தைக்கு அம்மாவாகி விட்ட இந்த முன்னாள் கனவுக் கன்னிமீண்டும் நடிக்க தயாராகி விட்டார்.இப்போது இடுப்பு சைஸ் டன்லப் டயர் மாதிரி பெரிதாகிவிட்டாலும் கூட ரசிகர்கள்தன்னை மீண்டும் ரசிப்பார்கள் என்ற அபார நம்பிக்கையில் உள்ளார் சிம்ஸ்.திருமணமாகிப் போன பிறகும் நம்ம ஊர் தயாரிப்பாளர்கள் பலர் தொடர்ந்து நடிக்கவர்றீகளா என்று கேட்டு தொணத்திக் கொண்டிருந்தனர். ஆனால் சிம்ஸ்தான் ஸாரிசொல்லிக் கொண்டிருந்தார்.இப்போது மீண்டும் நடிக்கத் தயார் என்று சிம்ரன் அறிவித்தும் பெரியஅளவில்ஆஃபர்கள் வரவில்லையாம். ஆனால் முக்கியமான வாய்ப்பு ஒன்று சிம்ஸைத் தேடிப்போயுள்ளது. சரத்குமாருடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்புதான் அது.படத்தை காக்க.. காக்க, மின்னலே, வேட்டையாடு விளையாடு இயக்குனர் கெளதம்மேனன் இயக்கவுள்ளார்.இப்படத்தில் சிம்ரன் தவிர ஜோதிகாவும் இருக்கிறாராம். காக்க காக்க, வேட்டையாடுவிளையாடு படத்திற்குப் பிறகு கெளதம் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் 3வது படம்இது.சரத்குமாருடன் ஜோதிகாவுக்கு இது முதல் படம். ஆனால் சிம்ரன் ஏற்கனவே சரத்துடன்நடித்துள்ளார், அவருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டவரும் கூட.படு பிசியாக நடிப்பது, பிறகு கல்யாணச் செய்தி வெளியாகி கொஞ்சம் இடைவெளிவிடுவது என ஜோ அடிக்கடி டபாய்த்துக் கொண்டிருந்தாலும், இன்னும் கூட அவர்கையில் படங்கள் இருக்கத்தான் செய்கிறது.தமிழோடு தெலுங்கிலும் ஜோவுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது.

By Staff

குடும்ப வாழ்க்கையில் ஒரு ரவுண்டை வெற்றிகரமாக முடித்து விட்ட சிம்ரன்,திருமணத்திற்குப் பின்னர் தமிழ் சினிமாவில் ரெண்டாவது ரவுண்டுக்கு ரெடியாகிறார்.சரத்குமார் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க சிம்ஸ் புக் ஆகியுள்ளார்.

தனது இடுப்பழகால் தமிழ் ரசிகர்களை கலக்கியெடுத்த சிம்ரன் அத்தனை முன்னணிநடிகர்களுடனும் நடித்து விட்டார். ரஜினி மட்டும்தான் பாக்கி என்ற நிலையில்திருமணமாகி சொந்த ஊருக்குப் போய் விட்டார்.

இப்போது ஒரு குழந்தைக்கு அம்மாவாகி விட்ட இந்த முன்னாள் கனவுக் கன்னிமீண்டும் நடிக்க தயாராகி விட்டார்.


இப்போது இடுப்பு சைஸ் டன்லப் டயர் மாதிரி பெரிதாகிவிட்டாலும் கூட ரசிகர்கள்தன்னை மீண்டும் ரசிப்பார்கள் என்ற அபார நம்பிக்கையில் உள்ளார் சிம்ஸ்.

திருமணமாகிப் போன பிறகும் நம்ம ஊர் தயாரிப்பாளர்கள் பலர் தொடர்ந்து நடிக்கவர்றீகளா என்று கேட்டு தொணத்திக் கொண்டிருந்தனர். ஆனால் சிம்ஸ்தான் ஸாரிசொல்லிக் கொண்டிருந்தார்.

இப்போது மீண்டும் நடிக்கத் தயார் என்று சிம்ரன் அறிவித்தும் பெரியஅளவில்ஆஃபர்கள் வரவில்லையாம். ஆனால் முக்கியமான வாய்ப்பு ஒன்று சிம்ஸைத் தேடிப்போயுள்ளது. சரத்குமாருடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்புதான் அது.


படத்தை காக்க.. காக்க, மின்னலே, வேட்டையாடு விளையாடு இயக்குனர் கெளதம்மேனன் இயக்கவுள்ளார்.

இப்படத்தில் சிம்ரன் தவிர ஜோதிகாவும் இருக்கிறாராம். காக்க காக்க, வேட்டையாடுவிளையாடு படத்திற்குப் பிறகு கெளதம் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் 3வது படம்இது.


சரத்குமாருடன் ஜோதிகாவுக்கு இது முதல் படம். ஆனால் சிம்ரன் ஏற்கனவே சரத்துடன்நடித்துள்ளார், அவருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டவரும் கூட.

படு பிசியாக நடிப்பது, பிறகு கல்யாணச் செய்தி வெளியாகி கொஞ்சம் இடைவெளிவிடுவது என ஜோ அடிக்கடி டபாய்த்துக் கொண்டிருந்தாலும், இன்னும் கூட அவர்கையில் படங்கள் இருக்கத்தான் செய்கிறது.

தமிழோடு தெலுங்கிலும் ஜோவுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X